Monday, November 16, 2009
நியாயத்தீர்ப்பு....
பலகாலங்களுக்கு முன் ஒரு பெரியவர் தன் மகனோடு வாழ்ந்துவந்தார். அவரிடம் காண்போர் யாவரையும் கவரும் வண்ணமாக ஒரு அழகான வெள்ளை குதிரையும் இருந்தது. அவரது நாட்டின் அரசருக்கு அந்த குதிரை மிகவும் பிடிக்கவே, அவர் அந்த பெரியவரிடம் என்ன விலைக்கும் அதை வாங்க தயாராக இருந்தார், ஆனால் அந்த பெரியவரோ அதை தன் மகனைவிட செல்லமாக வளர்ப்பதால் கொடுக்க மறுத்துவிட்டார்.
இது முடிந்தது ஒருவாரம் சென்றநிலையில், ஒருநாள் அந்த குதிரை காணாமல் போனது. அப்போது அந்த ஊர் மக்கள் கூடி "அரசர் கேட்கும்போதே கொடுத்திருந்தால் லாபமாக இருந்திருக்கும், இப்போதோ ஒன்றுமே இல்லாமல் கூடிக்கொண்டு திரும்ப வந்தது" என்று கூறினார்.
அதற்க்கு அவர், "நீங்கள் அதிகமாக யோசிக்கிறீர்கள், இதை நியாயம்தீர்ப்பதை விட்டு உங்கள் பணிகளை பாருங்கள்" என்று சாதாரணமாக கூறி சென்றார்.
இருபது நாட்கள் கடந்தன, அவரது அந்த குதிரை காட்டில் இருந்து வேறு ஐந்து குதிரைகளை கூடிக்கொண்டு வந்தது.
அதற்க்கு அந்த ஊர் மக்கள் "நீர் சொன்னது சரிதான் ஐயா, உன் குதிரை ஓடினது நன்மைக்குதான்" என்றனர். அதற்கும் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
பின்னர் ஒருநாள் அவரது மகன் அந்த புதிய குதிரை ஒன்றில் சவாரி செய்தபோது
கீழே விழுந்து கால் எலும்பு உடைந்தது. இப்போது அந்த ஊர் மக்கள், "இந்த குதிரைகள் வந்த நேரம் உங்களுக்கு சரி இல்லை, உங்கள் மகனது கால்கள் உடைந்தது பாருங்கள்" என்றனர், அபோதும் அவர் "எல்லாம் நன்மைக்கே" என்று கூறி சென்றார்.
சில தினங்களில் நாட்டில் போர் வரவே, அரசர் வீட்டுக்கு ஒருவர் வருமாறு ஆணை இட்டார். இவரது வீட்டில், இவர் முதியவர்; இவரது மகனும் நடக்க முடியாமல் இருப்பதால் யாரும் செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. மற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி பலர் பிள்ளைகளையும் இழந்தனர்.
எந்த ஒரு விஷயத்தையும் சூழ்நிலையைக் கொண்டோ, உணர்ச்சிவசப்பட்டோ நியாயம் தீர்க்க கூடாது.
Tuesday, November 3, 2009
கண்ணால் காண்பதும் பொய்.
ஒரு நாள் ஒரு பெரியவர், சுமார் இருபது வயது மதிக்கத்தக்க தன் மகனுடன் ரயிலில் ஏறினார். அங்கே அவர்களுக்கு ஜன்னல் ஓரமாக இருக்கை கிடைத்தது. ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த வாலிபன் தன் தந்தையிடம்,
"அப்பா மரங்கள் எல்லாம் எவ்வளவு வேகமாக நகருகிறது;
இந்த இலையில் உள்ளதுதான் பச்சை நிறமா..?;
ரயிலின் புகை வேகமாக பறக்கிறதே..!
ஐயோ மழைத்துளி எவ்வளவு அழகாக இருக்கிறது...!!!"
என்ற ஆசிரிய வார்த்தைகளை அவ்வப்போது கூறிக்கொண்டே வர, தந்தை மட்டும் "ஆமாம், ஆமாம்" என்ற ஒற்றை பதிலை மட்டுமே கூறியவாறு வந்தார்.
இதை கண்ட மாற்ற அனைவரும் மிகவும் ஆத்திரமானார்கள், "என்ன இவன் பயித்தியம் போல பேசுகிறான், அவன் தந்தையும் எல்லாவற்றிற்கும் ஆமாம் போடுகிறார்". இவர்கள் இருவரும் நம்மை முட்டாளாக நினைத்து பேசுகிறார்கள் என ஆத்திரமடைந்து, அந்த தந்தையிடம் வாதிட்டனர்.
அப்போது அந்த தந்தை மிகவும் நிதானமாக, "எங்களால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும். என் மகன் பிறவியிலேயே பார்வை இழந்தவன். இப்போது தான் அறுவை சிகிச்சை முடிந்து அழைத்து வருகிறேன். அவன் உலகத்தை பார்ப்பது இதுவே முதல்முறை. அதனால் தான் இவ்வளவு ஆச்சர்யமாக எல்லாவற்றையும் ரசிக்கிறான்" என்று கூறவே, அனைவரும் ஊமைகளாயினர்.
நாம் கண்களால் காண்கிற காரியங்களைக்கொண்டு எதையும் உறுதிசெய்ய முடியாது. எதையும் தீர விசாரித்து செயல்படுவது நலம்.
"அப்பா மரங்கள் எல்லாம் எவ்வளவு வேகமாக நகருகிறது;
இந்த இலையில் உள்ளதுதான் பச்சை நிறமா..?;
ரயிலின் புகை வேகமாக பறக்கிறதே..!
ஐயோ மழைத்துளி எவ்வளவு அழகாக இருக்கிறது...!!!"
என்ற ஆசிரிய வார்த்தைகளை அவ்வப்போது கூறிக்கொண்டே வர, தந்தை மட்டும் "ஆமாம், ஆமாம்" என்ற ஒற்றை பதிலை மட்டுமே கூறியவாறு வந்தார்.
இதை கண்ட மாற்ற அனைவரும் மிகவும் ஆத்திரமானார்கள், "என்ன இவன் பயித்தியம் போல பேசுகிறான், அவன் தந்தையும் எல்லாவற்றிற்கும் ஆமாம் போடுகிறார்". இவர்கள் இருவரும் நம்மை முட்டாளாக நினைத்து பேசுகிறார்கள் என ஆத்திரமடைந்து, அந்த தந்தையிடம் வாதிட்டனர்.
அப்போது அந்த தந்தை மிகவும் நிதானமாக, "எங்களால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும். என் மகன் பிறவியிலேயே பார்வை இழந்தவன். இப்போது தான் அறுவை சிகிச்சை முடிந்து அழைத்து வருகிறேன். அவன் உலகத்தை பார்ப்பது இதுவே முதல்முறை. அதனால் தான் இவ்வளவு ஆச்சர்யமாக எல்லாவற்றையும் ரசிக்கிறான்" என்று கூறவே, அனைவரும் ஊமைகளாயினர்.
நாம் கண்களால் காண்கிற காரியங்களைக்கொண்டு எதையும் உறுதிசெய்ய முடியாது. எதையும் தீர விசாரித்து செயல்படுவது நலம்.
Wednesday, September 23, 2009
சுவற்றில் அறைந்த ஆணி
ஒரு அழகிய சிற்றூரில் அதிக பாசம் கொண்ட தந்தையும் மகளும் வாழ்ந்து வந்தனர். தன் மகளுக்கு அதிகமாக கோபம் வருவதையும், அதனால் அவள் செய்யும் தவறுகளையும் கண்டு மனவேதனை கொண்ட தந்தை இந்த காரியங்களை தன் மகளுக்கு எப்படி சொல்வதென யோசித்தார்.
ஒரு நாள் தன் மகள் கோபம் கொண்ட நிலையில் அவர் அவள் கையில் ஒரு ஆணியை கொடுத்து தன் வீட்டின் பின் புறம் உள்ள சுவற்றில் அடிக்குமாறு கூறினார். இதே போல அவள் கோபப்படும் ஒவ்வொரு முறையும் இப்படி செய்ய சொல்லி கொஞ்சம் ஆணிகளை அவள் கைகளில் கொடுத்தார். முதலில் ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என இருந்தது; கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின்னர் அவள் மிக சாந்தமானால். அதன் பின் தன் தந்தையிடம் வந்து இப்பொது எனக்கு கோபம் வருவதில்லை அதே சமயம் நீங்கள் கொடுத்த ஆணிகளும் தீர்ந்தது என கூறினால்.
உடனே தந்தை, இனி நாளுக்கு ஒன்றாக அந்த ஆணிகளை பிடுங்கிவிடு என கூறினார். அவளும் அவ்வாறே செய்து முடித்தால்.
இவைகள் முடிந்த பின் தந்தை அவளை கூடிக்கொண்டு அந்த சுவர் அருகே சென்று அதை அவளுக்கு காண்பித்தார். "அழகாகவும் மிகவும் பலமாகவும் இருந்த இந்த சுவர் உன் கோபத்தினால் இப்போது அழகையும் அதன் பெலத்தையும் இழந்துவிட்டது. இதே போல் தான் மனித உறவுகளும்; நமது கோபத்தில் செய்யும் சிறு தவறுகள் நாளடைவில் அந்த உறவின் அழகையும் நெருக்கத்தையும் அழித்துவிடுகிறது" என்றார்.
மகளில் கண்களில் கண்ணீர் மட்டுமே பதிலாக நின்றது....
(யாக்கோபு 1:20)
ஒரு நாள் தன் மகள் கோபம் கொண்ட நிலையில் அவர் அவள் கையில் ஒரு ஆணியை கொடுத்து தன் வீட்டின் பின் புறம் உள்ள சுவற்றில் அடிக்குமாறு கூறினார். இதே போல அவள் கோபப்படும் ஒவ்வொரு முறையும் இப்படி செய்ய சொல்லி கொஞ்சம் ஆணிகளை அவள் கைகளில் கொடுத்தார். முதலில் ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என இருந்தது; கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பின்னர் அவள் மிக சாந்தமானால். அதன் பின் தன் தந்தையிடம் வந்து இப்பொது எனக்கு கோபம் வருவதில்லை அதே சமயம் நீங்கள் கொடுத்த ஆணிகளும் தீர்ந்தது என கூறினால்.
உடனே தந்தை, இனி நாளுக்கு ஒன்றாக அந்த ஆணிகளை பிடுங்கிவிடு என கூறினார். அவளும் அவ்வாறே செய்து முடித்தால்.
இவைகள் முடிந்த பின் தந்தை அவளை கூடிக்கொண்டு அந்த சுவர் அருகே சென்று அதை அவளுக்கு காண்பித்தார். "அழகாகவும் மிகவும் பலமாகவும் இருந்த இந்த சுவர் உன் கோபத்தினால் இப்போது அழகையும் அதன் பெலத்தையும் இழந்துவிட்டது. இதே போல் தான் மனித உறவுகளும்; நமது கோபத்தில் செய்யும் சிறு தவறுகள் நாளடைவில் அந்த உறவின் அழகையும் நெருக்கத்தையும் அழித்துவிடுகிறது" என்றார்.
மகளில் கண்களில் கண்ணீர் மட்டுமே பதிலாக நின்றது....
(யாக்கோபு 1:20)
Monday, August 17, 2009
தீப்பற்றிய வீடு...
கடல் வணிகர் ஒருவர் தனது பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தால் ஒரு குட்டி தீவை அடைந்தார். அது ஒரு மணல் திட்டால் ஆனா தீவாக இருந்ததால் அவருக்கு ஒதுங்க கூட ஒரு நிழல் இல்லை. பச்சை மீன்களே உணவாக போனது. இப்படியே நாட்கள் நகர, உதவ கூட ஆள் இல்லாத நிலையில் அவர் தேவனை நோக்கி வேண்டினார். அவர் தேவனுக்கு முன்பாக உண்மையும் உத்தமமுமாக இருந்தபடியால் அவரது ஜெபம் கேட்கப்பட்டது. மறுநாள் காலையில் அந்த தீவருகே ஒரு சிறிய குடிசை மிதந்து வந்தது. அதில் அனைத்து விதமான உணவுகளும் இருந்தது. தேவனுக்கு நன்றி சொல்லிய அந்த மனிதன் அதை எடுத்து பயன்படுத்திக்கொண்டார். அதில் இருந்த உணவுகள் தீர்ந்த நிலையில், தேவனை தன்னை சீக்கிரம் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டு பின்னர் மீன் பிடிக்க சென்றுவிட்டார்.
நேரம் சென்று திரும்பிய அவர் தனது குடிசைக்கு நேராக ஒரு மின்னல் தாக்குவதையும் அதனால் தன் குடிசை தீ பற்றி எரிவதையும் கண்டார். மனம் தாளாத வேதனையினால் கலங்கிப்போன அவர், தன்னை அறியாமலேயே உறங்கிவிட்டார். மறுநாள் காலை ஒரு கப்பல் தனது தீவை நோக்கி வருவதை கண்டு உற்சாக வெள்ளத்தில் குதித்த அவர், அந்த கப்பலின் மாலுமியிடம் "நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்?" என கேட்டார். அதற்க்கு அந்த மாலுமி, "நேற்று இரவு இங்கே தீயின் வெளிச்சம் தெரிந்தது, அதை கண்டே நாங்கள் வந்தோம்" என்றார்.
தேவனுக்கு நன்றி கூரியவராய் அவர் அந்த கப்பலில் புறப்பட்டார்.
தேவன் ஒரு ஆசிர்வாதத்தை கொடுத்தாலும், அதை எடுத்தாலும் நிச்சயம் அது நன்மைக்காகத்தான் இருக்கும்.
(எண்ணாகமம் 23:19)
நேரம் சென்று திரும்பிய அவர் தனது குடிசைக்கு நேராக ஒரு மின்னல் தாக்குவதையும் அதனால் தன் குடிசை தீ பற்றி எரிவதையும் கண்டார். மனம் தாளாத வேதனையினால் கலங்கிப்போன அவர், தன்னை அறியாமலேயே உறங்கிவிட்டார். மறுநாள் காலை ஒரு கப்பல் தனது தீவை நோக்கி வருவதை கண்டு உற்சாக வெள்ளத்தில் குதித்த அவர், அந்த கப்பலின் மாலுமியிடம் "நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்?" என கேட்டார். அதற்க்கு அந்த மாலுமி, "நேற்று இரவு இங்கே தீயின் வெளிச்சம் தெரிந்தது, அதை கண்டே நாங்கள் வந்தோம்" என்றார்.
தேவனுக்கு நன்றி கூரியவராய் அவர் அந்த கப்பலில் புறப்பட்டார்.
தேவன் ஒரு ஆசிர்வாதத்தை கொடுத்தாலும், அதை எடுத்தாலும் நிச்சயம் அது நன்மைக்காகத்தான் இருக்கும்.
(எண்ணாகமம் 23:19)
Tuesday, August 11, 2009
சந்தோஷத்தின் சாவி
என் தாய்க்கு தினமும் விதவிதமான உணவுகளை செய்து அசத்துவது வழக்கம். அதிலும் இரவு உணவு மிகவும் சிரமம் எடுத்து சிறப்பாக செய்வார்கள். ஒரு நாள் இரவு நானும் என் தந்தையும் இரவு உணவிற்காக காத்திருந்தோம். அப்பொழுது என் தாய் கருகிய நிலையில் இருந்த ரொட்டிகளையும், முட்டையும் கொண்டுவந்து என் தந்தை முன்னால் வைத்தார்கள். நானோ என் தந்தையை பார்த்தவாறே எனக்கு வைக்கப்பட்ட நல்ல ரொட்டிகளை சாப்பிட்டு முடித்தேன். என் தந்தையும் ஏதும் கூறாமல் வைத்த அனைத்து ரொட்டிகளையும் சாப்பிட்டு முடித்தார்.
நான் அங்கிருந்து எழுந்தவுடனே என் தந்தையிடம் கருகிய ரொட்டிகளை வைத்ததற்க்காக என் தாய் வருந்தியதையும் நான் கவனிக்க தவறவில்லை. அதே சமயம் என் தந்தையோ "நீ இதற்க்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம். ரொட்டிகள் முறுகலாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்" என்று என் தாயிடம் கூறினார்.
எல்லாம் முடிந்து நான் என் தந்தையுடன் படுக்கையறைக்கு சென்றேன், அப்போது நான் என் தந்தையிடம் கேட்டேன், "நிஜமாகவே உங்களுக்கு ரொட்டிகள் கருகியிருந்தால் பிடிக்குமா?".
அவர் புன்னகையுடன், "நிச்சயம் இல்லை. ஆனால் எப்போதும் உன் தாய் சிறப்பான உணவையே நமக்கு வழங்குவாள். அப்படி இருக்க, இன்று இப்படி கொடித்திருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் அதிக வேலையினால் சோர்ந்து போயிருக்கவேண்டும். இந்த நிலையில் நானும் அவளை குறை கூறினால் அவள் இன்னும் சோர்ந்துவிடுவாள்." என்றார்.
மேலும் அவர், "நான் அவளோடு வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில் அவளுக்கு உதவியாக இருக்க தவறினாலும், அவளை புரிந்துகொள்ளவும், அவள் தவறுகளை பொறுத்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டேன்." என்று கூறினார்.
நமது சந்தோஷத்தின் சாவி நம்மிடம் தான் இருக்கவேண்டும், அதை இன்னொருவர் பையில் போட்டுவிட்டால் நம் வாழ்க்கை இன்பமாக இருக்காது.
இவை அனைத்துக்கும் அன்பே பிரதானம்.
(1 கொரிந்தியர் 13:1-10)
நான் அங்கிருந்து எழுந்தவுடனே என் தந்தையிடம் கருகிய ரொட்டிகளை வைத்ததற்க்காக என் தாய் வருந்தியதையும் நான் கவனிக்க தவறவில்லை. அதே சமயம் என் தந்தையோ "நீ இதற்க்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம். ரொட்டிகள் முறுகலாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்" என்று என் தாயிடம் கூறினார்.
எல்லாம் முடிந்து நான் என் தந்தையுடன் படுக்கையறைக்கு சென்றேன், அப்போது நான் என் தந்தையிடம் கேட்டேன், "நிஜமாகவே உங்களுக்கு ரொட்டிகள் கருகியிருந்தால் பிடிக்குமா?".
அவர் புன்னகையுடன், "நிச்சயம் இல்லை. ஆனால் எப்போதும் உன் தாய் சிறப்பான உணவையே நமக்கு வழங்குவாள். அப்படி இருக்க, இன்று இப்படி கொடித்திருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் அதிக வேலையினால் சோர்ந்து போயிருக்கவேண்டும். இந்த நிலையில் நானும் அவளை குறை கூறினால் அவள் இன்னும் சோர்ந்துவிடுவாள்." என்றார்.
மேலும் அவர், "நான் அவளோடு வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில் அவளுக்கு உதவியாக இருக்க தவறினாலும், அவளை புரிந்துகொள்ளவும், அவள் தவறுகளை பொறுத்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டேன்." என்று கூறினார்.
நமது சந்தோஷத்தின் சாவி நம்மிடம் தான் இருக்கவேண்டும், அதை இன்னொருவர் பையில் போட்டுவிட்டால் நம் வாழ்க்கை இன்பமாக இருக்காது.
இவை அனைத்துக்கும் அன்பே பிரதானம்.
(1 கொரிந்தியர் 13:1-10)
Wednesday, July 29, 2009
இன்னும் வீடு திரும்பவில்லை...
45 ஆண்டு தேவ ஊழியத்துக்குப்பிறகு ஒரு தம்பதியர் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தன் தாய்நாட்டிற்கு திரும்பினர். அவர்கள் திரும்புவதற்கு ஒரு கப்பலில் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் கப்பல் அருகே வந்தபோது அங்கே மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்ததை கண்டனர். அந்த கூட்டம் என்னவாக இருக்கும் என்று விசாரித்தபோது, "கோடையில் ஓய்வெடுக்க தங்கள் தாய்நாட்டு அதிபர் வந்துவிட்டு திரும்புகிறார். அவரை பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம்" என்று அறிந்தனர்.
எல்லோரும் கப்பலில் ஏறினார், கப்பலும் புறப்பட்டது. எதையோ யோசித்தவாறு வந்த அந்த தேவ மனிதர் தன் மனைவியை நோக்கி, "நாம் தவறு செய்துவிட்டோமோ?. தேவனுக்காக ஊழியம் செய்த நமக்கு கிடைக்காத மரியாதை, மனிதர்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு கிடைகிறதே!" என்று கேட்டார்.
அதற்க்கு அந்த மனைவி, "அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். தேவன் எது செய்தாலும் நன்மைக்காக தான் இருக்கும்" என்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
பயணம் தொடர்ந்தது, கப்பல் சேரவேண்டிய இடத்தை அடைந்தது. அங்கேயும் மிக பெரிய கூட்டம். வாத்தியங்கள் முழங்க, மாலைகளுடன் மக்கள் வரிசையில் நின்று அந்த அதிபரை வரவேற்றனர். இந்த ஊழியரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் அவர் தன் மனைவியுடன் அமைதியாய் வீடு வந்து சேர்ந்தார்.
வீட்டுக்கு வந்த அவருக்கு தனது இந்த பயணம் மிக பெரிய ஒரு குழப்பமாகவே இருந்தது. திரும்பவும் தன் மனைவியிடம் தனது நிலயை அவர் கூற. இந்த முறையும் மனைவி அமைதியாய் அவரை நோக்கி, "நீங்கள் ஏன் ஜெப அறைக்கு சென்று உங்களது இந்த கேள்விகளை தேவனிடமே கேட்கக்கூடாது?" என்றால்.
அவரும் அதை ஏற்றுக்கொண்டு ஜெப அறைக்கு சென்றார். ஒருமணி நேரம் கழித்து வெளியில் வந்த அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். அவரை கண்ட மனைவி "உள்ளே பதில் கிடைத்ததா..? என்ன பதில்..?" என்று கேட்டால்.
அதற்க்கு அந்த ஊழியர், "அந்த அதிபர் தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை முடித்து வீடு திரும்பினார். எனவே அவருக்கு அந்த வரவேற்ப்பு. நான் உனக்கு கொடுத்துள்ள கடமையை முடித்து என் வீட்டுக்கு திரும்பும்போது இதை விட சிறந்த வரவேற்ப்பு உனக்காக காத்திருக்கிறது என்று தேவன் கூறினார்" என்றார்.
நீங்களும் இன்னும் வீடு திரும்பவில்லை. உங்கள் கொடுக்கப்பட்டுள்ள கடமையை முடித்து திரும்பும்போது நிச்சயம் அதன் பலன் அதிகமாய் இருக்கும்.
(2 பேதுரு 1:10,11)
Monday, July 20, 2009
தந்தயின் கரம்....
ஓர் அடர்ந்த காட்டு பகுதியில் குட்டி பெண்ணும் அவளது தந்தையும் நடந்து சென்றனர். வழியில் அவர்கள் ஒரு பெரிய கயிற்றுப்பாலத்தை கடக்க நேரிட்டது. அப்போது அந்த தந்தை தன் மகளிடம், "இது கயிற்றுப்பாலம் என்பதால் மிக குறுகலாக இருக்கும். எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க என் கரத்தை நன்றாக பிடித்துக்கொள்" என்றார்.
அதற்க்கு அந்த குட்டி பெண், "இல்லை..! இல்லை ..! நீங்கள் என் கரத்தை பிடித்துக்கொள்ளுங்கள்" என்றால். அதன் அர்த்தம் புரியாமல் அந்த தந்தை "இது என்ன புதிர்?" என்று கேட்க.
அந்த குட்டி பெண், "நான் உங்கள் கரத்தை பிடித்தால் எதாவது ஒரு சூழ்நிலையில் நான் அதை விட நேரலாம். ஆனால் நீங்கள் என் கரத்தை பிடித்தால் எந்த சூழ்நிலையிலும் என்னை விடமாட்டீர்கள் என்று நான் நன்றாக அறிவேன்." என்றால்.
இதே போல தான் தேவனோடு நாம் கொண்டுள்ள உறவும்.
நாம் அவர் கரத்தை பிடித்திருக்கிரோமா..?
அல்லது அவரை நமது கரத்தை பிடித்து நடத்த அனுமதித்திருக்கிரோமா..?
நாம் தேவனின் கரத்தில் நம்மை முழுதாக ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை செம்மையான பாதையில் பத்திரமாக நடத்துவார்.
(ஏசாயா 41:10)
அதற்க்கு அந்த குட்டி பெண், "இல்லை..! இல்லை ..! நீங்கள் என் கரத்தை பிடித்துக்கொள்ளுங்கள்" என்றால். அதன் அர்த்தம் புரியாமல் அந்த தந்தை "இது என்ன புதிர்?" என்று கேட்க.
அந்த குட்டி பெண், "நான் உங்கள் கரத்தை பிடித்தால் எதாவது ஒரு சூழ்நிலையில் நான் அதை விட நேரலாம். ஆனால் நீங்கள் என் கரத்தை பிடித்தால் எந்த சூழ்நிலையிலும் என்னை விடமாட்டீர்கள் என்று நான் நன்றாக அறிவேன்." என்றால்.
இதே போல தான் தேவனோடு நாம் கொண்டுள்ள உறவும்.
நாம் அவர் கரத்தை பிடித்திருக்கிரோமா..?
அல்லது அவரை நமது கரத்தை பிடித்து நடத்த அனுமதித்திருக்கிரோமா..?
நாம் தேவனின் கரத்தில் நம்மை முழுதாக ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை செம்மையான பாதையில் பத்திரமாக நடத்துவார்.
(ஏசாயா 41:10)
Wednesday, July 15, 2009
மனிதனின் வார்த்தைக்கே...
அதிகாலை நேரம், நல்ல குளிரான காலநிலை. அது ரஷ்யாவை வறுமை வாட்டிய நேரம். உலகின் பிரபல எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய், காலை நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது வழியில் வந்த ஒரு யாசகர் (பிச்சைக்காரன்) அவரிடம், "ஐயா எனக்கு உதவுங்கள்" என கேட்கவே, அவரும் தன் பைகளை துளாவினார். ஆனால் அவர் வந்த வழியில் இவ்வாறு வந்த பலருக்கு உதவியதால் இப்பொது அவரது பைகள் அவருக்கு உதவும் நிலையில் இல்லை.
என்ன செய்வது என்று குழம்பிய டால்ஸ்டாய், அந்த யாசகரை கட்டி அனைத்து "சகோதரரே தற்ப்போது உங்களுக்கு உதவ என்னிடத்தில் ஒன்றும் இல்லை, மன்னித்துக்கொள்ளவும்" என்று கூறினார்.
உடனே அந்த யாசகர், "பரவாயில்லை ஐயா, நீங்கள் என்னை சகோதரன் என்று அழைத்ததே எனக்கு மிகவும் பெரிய பரிசு" என்று கூறி கண்ணீர்மல்க விடைபெற்றார்.
மனிதனின் வார்த்தைக்கு கூட இவ்வளவு மதிப்பா..?? அப்படியானால் அதை சரியாக உபயோகிப்பதில் என்ன நஷ்டம்...?
மனிதனின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பென்றால், தேவனின் வார்த்தை...!!!!
(நீதிமொழிகள் 30:5)
என்ன செய்வது என்று குழம்பிய டால்ஸ்டாய், அந்த யாசகரை கட்டி அனைத்து "சகோதரரே தற்ப்போது உங்களுக்கு உதவ என்னிடத்தில் ஒன்றும் இல்லை, மன்னித்துக்கொள்ளவும்" என்று கூறினார்.
உடனே அந்த யாசகர், "பரவாயில்லை ஐயா, நீங்கள் என்னை சகோதரன் என்று அழைத்ததே எனக்கு மிகவும் பெரிய பரிசு" என்று கூறி கண்ணீர்மல்க விடைபெற்றார்.
மனிதனின் வார்த்தைக்கு கூட இவ்வளவு மதிப்பா..?? அப்படியானால் அதை சரியாக உபயோகிப்பதில் என்ன நஷ்டம்...?
மனிதனின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பென்றால், தேவனின் வார்த்தை...!!!!
(நீதிமொழிகள் 30:5)
Monday, June 29, 2009
நீ விசுவாசித்தால்....
இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்க வீரர் சென்ற கப்பல் ஒன்று எதிரிகளால் தகர்க்கப்பட்டது. அந்தசமயம் அவர் அருகில் இருந்த ஒரு குட்டி தீவிற்குள் நீந்தி கரையேறினார். ஆனால் அவர் இருக்கும் திசை நோக்கி ஒரு எதிரி நாட்டு கப்பல் வருவதை கண்டார், அதில் உள்ள ஒரு வீரன் தன்னை கண்டுவிட்டத்தையும் அவர் அறிந்தார். இந்த சமயத்தில் அவர்கள் கையில் சிக்கினால் நிச்சயம் மரணம்.
இந்த நிலையில், அவர் தேவனை நோக்கி பிரார்த்தனை செய்து, பின்னர் அங்கே இருந்த ஒரு குகைக்குள் சென்று மறைந்துக்கொண்டார். அவர் குகை பகுதிக்குள் செல்வதை கண்ட அந்த வீரர்கள் ஒவ்வொரு குகையாக சென்று பார்த்தனர். அவர்கள் இந்த மனிதன் இருக்கும் குகை அருகே வர வர இவருக்கு பயம் அதிகமானது. அந்த சமயம் மீண்டும் தேவனை நோக்கி மன்றாடினார். அப்போது அவர் அருகே ஒரு சிலந்தி வருவதை அவர் கண்டார், அந்த சிலந்தி அவர் இருந்த குகை வாயிலில் வலையை பின்னத்தொடங்கியது. இதை கண்ட அவர், "இறைவா! இந்த நேரத்தில் எனக்கு தேவை பலமான ஒரு சுவர்; ஆனால் இங்கே இருப்பதோ சிலந்தி வலை." என்று வருந்தினார். அந்த சமயத்துக்குள் அந்த சிலந்தி தன் முழு வலையையும் பின்னி முடித்து; அதே சமயம் அந்த வீரர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கே வந்த அந்த வீரர்கள், குகை வாசலில் சிலந்தி வலை உள்ளது, எனவே யாரும் உள்ளே இருக்க வாய்ப்பில்லை என்று அங்கிருந்து சென்றனர். அந்த மனிதரும் உயிர் பிழைத்தார்.
தேவன் ஒருவனை காக்க, மதில்கள் தேவையில்லை; சிலந்தியின் வலை கூட போதும்.
(ஏசாயா 49:15,16)
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்.
(யோவான் 11:40)
இந்த நிலையில், அவர் தேவனை நோக்கி பிரார்த்தனை செய்து, பின்னர் அங்கே இருந்த ஒரு குகைக்குள் சென்று மறைந்துக்கொண்டார். அவர் குகை பகுதிக்குள் செல்வதை கண்ட அந்த வீரர்கள் ஒவ்வொரு குகையாக சென்று பார்த்தனர். அவர்கள் இந்த மனிதன் இருக்கும் குகை அருகே வர வர இவருக்கு பயம் அதிகமானது. அந்த சமயம் மீண்டும் தேவனை நோக்கி மன்றாடினார். அப்போது அவர் அருகே ஒரு சிலந்தி வருவதை அவர் கண்டார், அந்த சிலந்தி அவர் இருந்த குகை வாயிலில் வலையை பின்னத்தொடங்கியது. இதை கண்ட அவர், "இறைவா! இந்த நேரத்தில் எனக்கு தேவை பலமான ஒரு சுவர்; ஆனால் இங்கே இருப்பதோ சிலந்தி வலை." என்று வருந்தினார். அந்த சமயத்துக்குள் அந்த சிலந்தி தன் முழு வலையையும் பின்னி முடித்து; அதே சமயம் அந்த வீரர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கே வந்த அந்த வீரர்கள், குகை வாசலில் சிலந்தி வலை உள்ளது, எனவே யாரும் உள்ளே இருக்க வாய்ப்பில்லை என்று அங்கிருந்து சென்றனர். அந்த மனிதரும் உயிர் பிழைத்தார்.
தேவன் ஒருவனை காக்க, மதில்கள் தேவையில்லை; சிலந்தியின் வலை கூட போதும்.
(ஏசாயா 49:15,16)
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையை காண்பாய்.
(யோவான் 11:40)
Friday, June 19, 2009
தேவனின் கடிதம்
அழகிய சிற்றூர், அதிகாலை நேரம் "ரூத்" என்ற பெண்மணி வீட்டின் தபால் பெட்டியில் ஒரு கடிதம் விழுந்த சத்தம் கேட்டது. உடனே அவள் அந்த கடிதத்தை எடுக்க சென்றால்; தபால்காரன் வந்து போன அறிகுறியும் இல்லை, "அனுப்புனர்" முகவரியும் இல்லை, தபால் தலையும் இல்லை.
அந்த கடிதத்தில்,
"இன்று மாலை நான் உங்கள் வீட்டுக்கு உணவருந்த வருகிறேன். அன்புடன், - கடவுள்"
என்று எழுதியிருப்பதை கண்டு அவளுக்கு மிகவும் ஆச்சர்யம். கடவுள் வருகிறார் என்றல் எதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்று தன் சமயலறைக்கு சென்றால். ஆனால் அவளது வறுமை அங்கேயும் தெரிந்தது. என்ன செய்வது என்று அறியாத அவள், தன் பண்ப்பியை நோக்கினால். அதில் சில்லரையாக 50 ரூபாய் இருந்தது, உடனே அதைக்கொண்டு சில ரொட்டி துண்டுகளும் கொஞ்சம் கறியும் வாங்கி உணவை தயார் செய்துகொண்டிருந்தால்.
அப்போது "கருணை உள்ளம் கொண்ட தாயே, வெளியே வந்து எங்களுக்கு உதவவேண்டும்" என்று ஒரு குரல். அவள் சென்று பார்த்தால், அங்கே மிகவும் வயதுசென்ற ஒரு பெரியவர் தன் மனைவியுடன் நின்றார். ரூத்தை கண்ட அவர், "தாயே நாங்கள் மிகவும் பசியாய் இருக்கிறோம். உங்களால் முடிந்தால் எங்களுக்கு எதாவது உதவுங்கள்" என்று சொன்னார். அதற்க்கு அவள், "ஐயா நானும் ஒன்றும் பெரிய வசதி கொண்டவள் இல்லை. என்னிடம் கொஞ்சம் ரொட்டிகள் மட்டுமே உள்ளது, ஆனாலும் இன்று இரவு ஒரு முக்கியமான விருந்தாளி வருகிறார்" என்றல். அதை கேட்ட அவர், சரி அம்மா பரவாயில்லை என்று கூறி அங்கிருந்து தளர்ந்த நடையுடன் புறப்பட்டார்.
இருந்தும் மனது கேட்காத ரூத், அவர்களை நோக்கி "ஐயா ஒரு நிமிடம் பொறுங்கள், என் விருந்தாளியிடம் நான் எதாவது சொல்லி சமாளித்துகொள்கிறேன். தேவையுடைய நீங்கள் இந்த உணவை கொண்டுசெல்லுங்கள்" என்று கூறி, தான் தயார் செய்த அனைத்தையும் அவர்களிடம் கொடுத்து அனுப்பினாள். அப்போது அந்த பெரியவரின் மனைவி குளிரினால் வாடிகொண்டிருப்பதை கண்ட அவள், என்னிடம் இன்னொரு மேலாடை உள்ளது நீங்கள் இதை கொண்டுசெல்லுங்கள் என்று தான் அணிந்திருந்ததை கழற்றி அவர்களிடம் கொடுத்தால். அவர்களும் சந்தோசமாக பெற்றுக்கொண்டு சென்றனர்.
பின்னர் அவள் தனியாக அமர்ந்து தேவன் வந்தால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள், அப்பொழுது மறுபடியும் தபால் பெட்டியில் ஒரு கடிதம் விழும் சத்தம் கேட்டது. ஒரே நாளில் தபால்காரன் இருமுறை வர மாட்டான், அதுவும் இந்த இரவில் நிச்சயம் வரமாட்டன் என அறிந்தும் அவள் சென்று பார்த்தால். மீண்டும் அதேவிதமான கடிதம்,
"நீ கொடுத்த இரவு விருந்துக்கு மிக்க நன்றி. மேலும் நீ கொடுத்த ஆடை மிகவும் நன்றாக இருந்தது, அதற்கும் நன்றி. அன்புடன், -கடவுள்"
"மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்"
(மத்தேயு 25:40,45)
அந்த கடிதத்தில்,
"இன்று மாலை நான் உங்கள் வீட்டுக்கு உணவருந்த வருகிறேன். அன்புடன், - கடவுள்"
என்று எழுதியிருப்பதை கண்டு அவளுக்கு மிகவும் ஆச்சர்யம். கடவுள் வருகிறார் என்றல் எதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்று தன் சமயலறைக்கு சென்றால். ஆனால் அவளது வறுமை அங்கேயும் தெரிந்தது. என்ன செய்வது என்று அறியாத அவள், தன் பண்ப்பியை நோக்கினால். அதில் சில்லரையாக 50 ரூபாய் இருந்தது, உடனே அதைக்கொண்டு சில ரொட்டி துண்டுகளும் கொஞ்சம் கறியும் வாங்கி உணவை தயார் செய்துகொண்டிருந்தால்.
அப்போது "கருணை உள்ளம் கொண்ட தாயே, வெளியே வந்து எங்களுக்கு உதவவேண்டும்" என்று ஒரு குரல். அவள் சென்று பார்த்தால், அங்கே மிகவும் வயதுசென்ற ஒரு பெரியவர் தன் மனைவியுடன் நின்றார். ரூத்தை கண்ட அவர், "தாயே நாங்கள் மிகவும் பசியாய் இருக்கிறோம். உங்களால் முடிந்தால் எங்களுக்கு எதாவது உதவுங்கள்" என்று சொன்னார். அதற்க்கு அவள், "ஐயா நானும் ஒன்றும் பெரிய வசதி கொண்டவள் இல்லை. என்னிடம் கொஞ்சம் ரொட்டிகள் மட்டுமே உள்ளது, ஆனாலும் இன்று இரவு ஒரு முக்கியமான விருந்தாளி வருகிறார்" என்றல். அதை கேட்ட அவர், சரி அம்மா பரவாயில்லை என்று கூறி அங்கிருந்து தளர்ந்த நடையுடன் புறப்பட்டார்.
இருந்தும் மனது கேட்காத ரூத், அவர்களை நோக்கி "ஐயா ஒரு நிமிடம் பொறுங்கள், என் விருந்தாளியிடம் நான் எதாவது சொல்லி சமாளித்துகொள்கிறேன். தேவையுடைய நீங்கள் இந்த உணவை கொண்டுசெல்லுங்கள்" என்று கூறி, தான் தயார் செய்த அனைத்தையும் அவர்களிடம் கொடுத்து அனுப்பினாள். அப்போது அந்த பெரியவரின் மனைவி குளிரினால் வாடிகொண்டிருப்பதை கண்ட அவள், என்னிடம் இன்னொரு மேலாடை உள்ளது நீங்கள் இதை கொண்டுசெல்லுங்கள் என்று தான் அணிந்திருந்ததை கழற்றி அவர்களிடம் கொடுத்தால். அவர்களும் சந்தோசமாக பெற்றுக்கொண்டு சென்றனர்.
பின்னர் அவள் தனியாக அமர்ந்து தேவன் வந்தால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள், அப்பொழுது மறுபடியும் தபால் பெட்டியில் ஒரு கடிதம் விழும் சத்தம் கேட்டது. ஒரே நாளில் தபால்காரன் இருமுறை வர மாட்டான், அதுவும் இந்த இரவில் நிச்சயம் வரமாட்டன் என அறிந்தும் அவள் சென்று பார்த்தால். மீண்டும் அதேவிதமான கடிதம்,
"நீ கொடுத்த இரவு விருந்துக்கு மிக்க நன்றி. மேலும் நீ கொடுத்த ஆடை மிகவும் நன்றாக இருந்தது, அதற்கும் நன்றி. அன்புடன், -கடவுள்"
"மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்"
(மத்தேயு 25:40,45)
Thursday, June 11, 2009
நீ வாழ....!!!
விவசாய திருவிழாவில்தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக "சிறந்த விவசாயி" பரிசுபெறும் அந்த விவசாயிக்கும் பத்திரிக்கயாளருக்கும் நடந்த உரையாடல்.
பத்: நீங்கள் பெற்ற இந்த விருதைப்பற்றி சொல்லமுடியுமா..?
விவ: தொடர்ந்து ஐந்தவதுமுறையாக இதை பெறுகிறேன். மிக்க மகிழ்ச்சி. அதிக மகசூல் மற்றும் சிறந்த தரமான சோள விளைச்சலுக்காக இதை பெறுகிறேன்.
பத்: இந்த தரமான விளைச்சல் பெற்றதற்க்கான ரகசியத்தை கூறமுடியுமா..?
விவ: இதில் எந்த ரகசியமும் இல்லை. நல்ல தரமான விதை, முறையான விவசாயம். இதுவே இந்த aபரிசுக்கு காரணம்.
பத்: தரமான விதையென்று கூறுகிறீர்கள் ஆனால் அதை உங்கள் பக்கத்து நிலகாரர்களுடனும் நீங்கள் பகிர்ந்துகொள்கிறீர்கள். அது உங்களுக்கு போட்டியை ஏற்படுத்தாதா..?
விவ: நிச்சயமாக போட்டி வரும். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் அறியவேண்டும். சோள விளைச்சலின் காலத்தில் சூறைக்காற்று அடிப்பதும் அப்போது அது சோள செடியின் விந்தைகொண்டுவந்து அருகே உள்ள நிலங்களில் தெளிப்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி வந்து விழும் விந்து தரமானதாய் இருந்தால் விளைச்சல் தெளிவாக இருக்கும், இல்லையென்றால் அது நமது விளைச்சலையும் தரத்தையும் சேர்த்து கெடுக்கும். எனவே என் தரமான விதையை கொண்டு அவர்களும் வாழ்கிறார்கள், அதனால் நானும் வாழ்கிறேன்.
நீ வாழ பிறரை கெடுக்காதே என்பதைவிட, நீ வாழ பிறரையும் வாழவை என்பதே சரி.
Monday, June 8, 2009
பழைய காலனி
ஓர் அழகிய கிராமத்தின் வயல்வெளி வழியாக ஒரு ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டே நடந்துசென்றர்கள். அப்போது வழியில் ஒரு ஜோடி பழைய காலணியும் அதன் அருகே ஒரு பழைய ஆடையும் இருந்தது. அதை கண்ட அவர்கள் சுற்றும் முற்றும் பார்க்க, தூரத்தில் ஒரு பெரியவர் வயலில் வேலை செய்வதை கண்டு அது அவருடையது தான் என உறுதி செய்தனர்.
உடனே அந்த மாணவன், ஆசிரியரை நோக்கி; "இந்த பழைய காலனியை வைத்து நம் ஒரு வேடிக்கை பார்க்கலாமா?. இதை எடுத்து மறைத்துவிட்டு நாமும் அந்த புதரின் அருகே மறைந்திருப்போம். இந்த பழைய காலனிக்காக அந்த பெரியவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம்." என்றான்.
அதை கேட்ட அந்த ஆசிரியர்,
"தம்பி உன் குறும்பு சரியானதுதான், ஆனால் அதை அவருடைய வறுமையை வைத்து விளையாடாமல் உனது செல்வத்தை வைத்து விளையாடலாமே..!!
நீ சொன்னதுபோல அந்த காலனியை மறைத்துவைத்து விளையாடுவதற்கு பதிலாக, அந்த ஒவ்வொரு காலனியிலும் ஒரு காசை போட்டுவிட்டு நாம் மறைந்திருப்போம். அப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்." என்றார்.
அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு மறைந்திருந்தனர்.
அந்த பெரியவரும் தன் வேலையை முடித்து கரைக்கு வந்தார். அங்கே இருந்த தனது உடைகளை எடுத்துக்கொண்டு தன் காலனியை அணிய முயற்சித்தார். அப்பொழுது தன் காலில் ஏதோ ஒன்று உறுத்துவது போல உணர்ந்த அவர் தன் காலனியை பரிசோதித்தார். அதில் இருந்த காசை தன் கையில் எடுத்து, யாருடையதாக இருக்கும் என்று சுற்றிலும் பார்த்தார். ஒருவரும் இல்லாததால் அதை தன் சட்டை பையில் போட்டுக்கொண்டு, மற்றொரு செருப்பை அணிய சென்றார். அதிலும் ஒரு காசை கண்ட அவர், உடனே தன் கால்களால் முடக்கி வானத்துக்கு நேராக தன் முகத்தை உயார்த்தி,
"கடவுளே, உமக்கு மிகவும் நன்றி. உடல் நலம் குன்றி உதவ யாருமே இல்லாமல் மனைவியும், அடுத்த வேலை உணவுக்கு வழிதெரியாத என் பிள்ளைகளையும் போஷிக்க யாரென்றே தெரியாத ஒருவரால் எனக்கு நீர் கொடுத்த இந்த காசுக்காக நன்றி. இந்த காசை எனக்காக விட்டுச்சென்ற அவரையும், அவர் குடும்பத்தையும் நீர் ஆயிரம் மடங்கு ஆசிர்வதிக்கவேண்டும்" என்று வேண்டினார்.
இதை கண்ட அந்த மாணவன் கண்களில் கண்ணீர் வெள்ளம். உடனே அவன் அந்த ஆசிரியரை நோக்கி "இந்த நாளும், இந்த சம்பவமும், நீங்கள் கற்றுகொடுத்த இந்த பாடமும், என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. உங்களுக்கு என் மனப்பூர்வ நன்றி....!!!" என்று கூறினான்.
(யாக்கோபு 2:5-9)
உடனே அந்த மாணவன், ஆசிரியரை நோக்கி; "இந்த பழைய காலனியை வைத்து நம் ஒரு வேடிக்கை பார்க்கலாமா?. இதை எடுத்து மறைத்துவிட்டு நாமும் அந்த புதரின் அருகே மறைந்திருப்போம். இந்த பழைய காலனிக்காக அந்த பெரியவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம்." என்றான்.
அதை கேட்ட அந்த ஆசிரியர்,
"தம்பி உன் குறும்பு சரியானதுதான், ஆனால் அதை அவருடைய வறுமையை வைத்து விளையாடாமல் உனது செல்வத்தை வைத்து விளையாடலாமே..!!
நீ சொன்னதுபோல அந்த காலனியை மறைத்துவைத்து விளையாடுவதற்கு பதிலாக, அந்த ஒவ்வொரு காலனியிலும் ஒரு காசை போட்டுவிட்டு நாம் மறைந்திருப்போம். அப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்." என்றார்.
அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு மறைந்திருந்தனர்.
அந்த பெரியவரும் தன் வேலையை முடித்து கரைக்கு வந்தார். அங்கே இருந்த தனது உடைகளை எடுத்துக்கொண்டு தன் காலனியை அணிய முயற்சித்தார். அப்பொழுது தன் காலில் ஏதோ ஒன்று உறுத்துவது போல உணர்ந்த அவர் தன் காலனியை பரிசோதித்தார். அதில் இருந்த காசை தன் கையில் எடுத்து, யாருடையதாக இருக்கும் என்று சுற்றிலும் பார்த்தார். ஒருவரும் இல்லாததால் அதை தன் சட்டை பையில் போட்டுக்கொண்டு, மற்றொரு செருப்பை அணிய சென்றார். அதிலும் ஒரு காசை கண்ட அவர், உடனே தன் கால்களால் முடக்கி வானத்துக்கு நேராக தன் முகத்தை உயார்த்தி,
"கடவுளே, உமக்கு மிகவும் நன்றி. உடல் நலம் குன்றி உதவ யாருமே இல்லாமல் மனைவியும், அடுத்த வேலை உணவுக்கு வழிதெரியாத என் பிள்ளைகளையும் போஷிக்க யாரென்றே தெரியாத ஒருவரால் எனக்கு நீர் கொடுத்த இந்த காசுக்காக நன்றி. இந்த காசை எனக்காக விட்டுச்சென்ற அவரையும், அவர் குடும்பத்தையும் நீர் ஆயிரம் மடங்கு ஆசிர்வதிக்கவேண்டும்" என்று வேண்டினார்.
இதை கண்ட அந்த மாணவன் கண்களில் கண்ணீர் வெள்ளம். உடனே அவன் அந்த ஆசிரியரை நோக்கி "இந்த நாளும், இந்த சம்பவமும், நீங்கள் கற்றுகொடுத்த இந்த பாடமும், என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. உங்களுக்கு என் மனப்பூர்வ நன்றி....!!!" என்று கூறினான்.
(யாக்கோபு 2:5-9)
Friday, June 5, 2009
சுயமதிப்பீடு
மிகப்பெரிய பேச்சாளர் ஒருவர் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அறையில் பேசிக்கொண்டிருந்தார், அப்போது தன் பேச்சின் நடுவே ஒரு 500 ரூபாய் பணத்தை தன் கையில் உயர்த்தியபடி இந்த பணம் யாருக்கு வேண்டும் என்று கேட்டார். அங்கிருந்த அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினர், உடனே அந்த பேச்சாளர் அந்த பணத்தை தன் கைகளால் நன்றாக கசக்கி பின்னும் "இது யாருக்கு வேண்டும்?" என கேட்டார். அபோதும் அனைவரும் தன் கரங்களை உயர்த்தினர். பின்னர் அதை தரையில் போட்டு தன் காலால் கசக்கி அழுக்காக்கி எடுத்து திரும்பவும் "இது யாருக்கு வேண்டும்?" என கேட்டார். மீண்டும் கைகளின் உயரம் குறையவில்லை.
உடனே அந்த கூடத்தில் இருந்த ஒருவரை நோக்கி, "புதிய பணம் என்றாலும் வேண்டும் என்கிறீர், கசங்கினாலும் வேண்டும் என்கிறீர், அழுக்கனாலும் வேண்டும் என்கிறீர், ஏன் என்று கூறமுடியுமா?" என கேட்டார். அதற்க்கு அவன் "எந்த நிலையானாலும் அந்த பணத்தின் மதிப்பு மாறவில்லையே !" என்றன்.
அங்கே கூடியிருந்தவர்களை பார்த்து அந்த பேச்சாளர், "இதுபோல தான் மனித வாழ்வும். அழகான கசங்காத ரூபாய் நோட்டை போல தான் அனைவருமே தங்கள் வாழ்வை துவங்குகிறோம். ஆனால் வாழ்க்கையில ஏற்படும் சில சோதனைகளாலும், தோல்விகளாலும் நாம் நம்மையே குறைத்து மதிபிடுகிறோம். ரூபாய் நோட்டு புதிதானாலும், பழையதானாலும், கசங்கினாலும், அழுக்கனாலும் அதன் மதிப்பு குறைவதிள்ளயோ, அப்படித்தான் நாம் ஒவ்வொருவரின் மதிப்பும். இதை ஒரு மனிதன் எப்போது உணர்கிறானோ அப்போதே அவன் வாழ்வில் வெற்றியாளனாக மாறிவிடுகிறான்" என்றார்.
நமைப்பற்றி பிறரைவிட நன்றாக அறிந்தவர் நாம் தான்.
நமை மதிப்பீடு செய்ய நாமே சிறந்தவர்.
நமது சுயமதிப்பீடும், நல்லோர் ஆலோசனையும் இருந்தால் நமது வெற்றியை யாராலும் மாற்றமுடியாது.
உடனே அந்த கூடத்தில் இருந்த ஒருவரை நோக்கி, "புதிய பணம் என்றாலும் வேண்டும் என்கிறீர், கசங்கினாலும் வேண்டும் என்கிறீர், அழுக்கனாலும் வேண்டும் என்கிறீர், ஏன் என்று கூறமுடியுமா?" என கேட்டார். அதற்க்கு அவன் "எந்த நிலையானாலும் அந்த பணத்தின் மதிப்பு மாறவில்லையே !" என்றன்.
அங்கே கூடியிருந்தவர்களை பார்த்து அந்த பேச்சாளர், "இதுபோல தான் மனித வாழ்வும். அழகான கசங்காத ரூபாய் நோட்டை போல தான் அனைவருமே தங்கள் வாழ்வை துவங்குகிறோம். ஆனால் வாழ்க்கையில ஏற்படும் சில சோதனைகளாலும், தோல்விகளாலும் நாம் நம்மையே குறைத்து மதிபிடுகிறோம். ரூபாய் நோட்டு புதிதானாலும், பழையதானாலும், கசங்கினாலும், அழுக்கனாலும் அதன் மதிப்பு குறைவதிள்ளயோ, அப்படித்தான் நாம் ஒவ்வொருவரின் மதிப்பும். இதை ஒரு மனிதன் எப்போது உணர்கிறானோ அப்போதே அவன் வாழ்வில் வெற்றியாளனாக மாறிவிடுகிறான்" என்றார்.
நமைப்பற்றி பிறரைவிட நன்றாக அறிந்தவர் நாம் தான்.
நமை மதிப்பீடு செய்ய நாமே சிறந்தவர்.
நமது சுயமதிப்பீடும், நல்லோர் ஆலோசனையும் இருந்தால் நமது வெற்றியை யாராலும் மாற்றமுடியாது.
Tuesday, June 2, 2009
நம்பிக்கை
ஒரு ஊரில் ஒரு ஆமை தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவந்தது. ஒரு நாள் அது தன் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு அந்த ஆமை, தன் மனைவி மற்றும் மூன்று குட்டிகளுடன் பிரயாணத்தை தொடங்கியது. ஏறக்குறைய ஒரு ஆண்டு பிரயானதுக்குப்பின் அவைகள் ஒரு தோப்பை அடைந்தன. அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கவே, அங்கே இருந்து உணவருந்தலாம் என முடிவுசெய்து அதற்கு ஆயத்தமாயின. அப்போதுதான் உணவுக்கு உப்பு கொண்டுவராதது தெரிந்தது. இபொழுது அனைவரும் சென்றுவருவது தாமதம் ஆகும், எனவே கடைக்குட்டி ஆமையை மட்டும் வீட்டுக்கு அனுப்பி எடுத்துவர சொல்லலாம் என்று முடிவெடுத்தன. ஆனால் அவ்வளவு தூரம் தனியாக போகமுடியாது என அந்த குட்டி ஆமை சொல்லவே, நீண்ட நேரம் போராடி அந்த குட்டி ஆமையை சம்மதிக்கவைதனர். ஆனாலும் அந்த குட்டி "நான் திரும்ப வரும்வரை யாரும் சாப்பிட கூடாது" என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டு புறப்பட்டது.
காலங்கள் போயின, ஏறக்குறைய ஒரு வருடம் தாண்டியது. இதுவரை அந்த குட்டி ஆமை வரவில்லை. இந்த நிலையில், மற்ற இரண்டு குட்டிகளும் பசியால் துடிக்க. உப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை, நாங்கள் மட்டுமாவது சாப்பிடுகிறோம் என்று கூறின. ஆனால் தந்தை ஆமை சம்மதிக்காத நிலையில் இன்னும் சிலநாள் காத்திருந்தன. ஒரு நிலையில் அவைகளால் பொறுக்கமுடியாமல் உணவை திறந்து சாப்பிட தொடங்கின. உடனே அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னாலே இருந்து அந்த குட்டி ஆமை வெளியே வந்து, "நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் போகாமல், உங்களை கவனித்தேன்." என்று கூறியது.
இந்த குட்டி ஆமையின் செயலால், அதற்கும் பலனில்லை மற்றவர்களுக்கும் பயனில்லை.
எல்லோரையும் நம்பியவனும், யாரையும் நம்பாதவனும் நல்வாழ்வு வாழ தகுதியற்றவர்கள்.
"நம்பி வாழவேண்டும்; பிறர் நம்ப வாழவேண்டும்."
(ரோமர் 8:24,25)
காலங்கள் போயின, ஏறக்குறைய ஒரு வருடம் தாண்டியது. இதுவரை அந்த குட்டி ஆமை வரவில்லை. இந்த நிலையில், மற்ற இரண்டு குட்டிகளும் பசியால் துடிக்க. உப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை, நாங்கள் மட்டுமாவது சாப்பிடுகிறோம் என்று கூறின. ஆனால் தந்தை ஆமை சம்மதிக்காத நிலையில் இன்னும் சிலநாள் காத்திருந்தன. ஒரு நிலையில் அவைகளால் பொறுக்கமுடியாமல் உணவை திறந்து சாப்பிட தொடங்கின. உடனே அங்கிருந்த ஒரு மரத்தின் பின்னாலே இருந்து அந்த குட்டி ஆமை வெளியே வந்து, "நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் போகாமல், உங்களை கவனித்தேன்." என்று கூறியது.
இந்த குட்டி ஆமையின் செயலால், அதற்கும் பலனில்லை மற்றவர்களுக்கும் பயனில்லை.
எல்லோரையும் நம்பியவனும், யாரையும் நம்பாதவனும் நல்வாழ்வு வாழ தகுதியற்றவர்கள்.
"நம்பி வாழவேண்டும்; பிறர் நம்ப வாழவேண்டும்."
(ரோமர் 8:24,25)
Monday, June 1, 2009
யாருடைய பிரார்த்தனை கேட்கப்படும்
அமைதியாய் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல், திடீர் புயலினால் நிலைகுலைந்து உடைந்தது. அதில் பிரயாணம் செய்த மக்கள் நடு கடலில் தத்தளிக்க, ஒரு வாலிபனும், ஒரு பெரியவரும் மட்டும் ஒரு மரத்துண்டை பிடித்து ஒரு குட்டி தீவை அடைந்தனர். அங்கே செய்வதறியாது திகைத்த அவர்கள், கடவுளிடம் பிரார்த்தனை செய்வது மட்டுமே ஒரே வழி என்று உணர்ந்தனர்.
"நாம் இருவரும் தேவனை நோக்கி வேண்டுவோம், யாருடைய விண்ணப்பம் கேட்கபடுகிறது என்று பார்க்கலாம்" என்று அந்த வாலிபன் சொல்ல, அதை ஒப்புக்கொண்டவர்கலாய் இருவரும் ஆளுக்கொரு திசயாய் பிரிந்து சென்றனர்.
முதலில் அவர்கள் இருவரும் வேண்டியது தங்கள் உணவிற்காக, அந்த வாலிபன் கணிகளுடைய ஒரு மரத்தை கண்டு தன் பசியை போக்கிகொண்டான். ஆனால் அந்த பெரியவர் சென்ற திசையிலோ ஒன்றும் அகப்படவில்லை.
சில நாட்கள் சென்றபிறகு அந்த வாலிபன் தனிமயாக இருப்பதாக உணர்ந்து தனக்கொரு மனைவி வேண்டுமென வேண்டினான். அப்பொழுது கடலில் மிதந்து ஒரு பெண் அவனை தேடி வர, அவளை அவன் திருமணம் செய்துகொண்டான். பின்னர் தங்குவதற்கு வீடு, உணவு, உடை என தன் பட்டியலை நீட்டித்தான். ஆச்சர்யமாக மறுநாளில் அவை எல்லாமே அவனை தேடி வந்தது.
தீவு வாழ்க்கை சலித்துபோகவே அந்த வாலிபன் தன் மனைவியுடன் நாட்டுக்கு திரும்பநினைதான். எனவே இந்தமுறை தனக்கொரு கப்பல் வேண்டுமென வேண்டினான். மறுநாள் காலையில் தீவின் கரையோரமாக ஒரு கப்பல் வந்து நின்றதை கண்டு தன் மனைவியுடன் அதி ஏறி புறப்பட ஆயத்தமானான்.
அப்பொழுது வானத்தில் இருந்து ஒரு தேவதூதன் அவனை நோக்கி, "உன்னோடு வந்த உன் உடனாளியை இந்த தீவில் விட்டு நீ மட்டும் எங்கே புறப்பட்டாய்?" என்று கேட்டான்.
அதற்க்கு அந்த வாலிபன், "இவை அனைத்தும் நான் தேவனிடம் வேண்டி கிடைத்தவை, இவைகள் எனக்குரிய ஆசிர்வாதங்கள். நான் ஏன் அவரை அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்?" என்றான்.
உடனே அந்த தேவதூதன் "நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவை அனைத்தும் உன் வின்னபங்களுக்கு கிடைத்தது அல்ல, அந்த பெரியவரின் ஒரே ஒரு விண்ணப்பத்திற்கு கிடைத்த பதில்" என்று கூறினான். இதை கேட்ட அந்த வாலிபன் "அப்படி அவர் என்ன விண்ணப்பம் செய்தார்?" என்றான்.
"கடவுளே நீர் என்னோடு இருக்கிறீர், என்னை காக்கின்றீர். ஆனாலும் அந்த வாலிபன் சோர்ந்துபோகாமல் திடமனதாய் இருக்க, அவன் வீடு சென்று சேரும்வரை அவன் வேண்டுவது எல்லாவற்றையும் அவனுக்கு அருளவும்" - என்பதே அந்த பெரியவரின் விண்ணப்பம் என அந்த தேவதூதன் வெளிபடுத்தினான்.
நமக்கு கிடைப்பது எல்லாமே நமது பிரார்த்தனைக்கு மட்டுமே கிடைக்கும் பலன் அல்ல. நமக்காக வேண்டும் மற்றவர்களாலும் என்பதை மறக்கக்கூடாது.
தமக்காக வேண்டுவோரின் விண்ணப்பங்கள் தோற்கலாம், ஆனால் பிறருக்காக உண்மையாய் வேண்டினால் தேவன் நிச்சயம் பதிலளிப்பார்.
அதேபோல நாம் பிறருக்காக வேண்டும்போது நமக்காக பரிந்து பேச தேவதூதர்களே வருவார்கள் என்பதுவும் உண்மை.
(மத்தேயு 5:44-48)
"நாம் இருவரும் தேவனை நோக்கி வேண்டுவோம், யாருடைய விண்ணப்பம் கேட்கபடுகிறது என்று பார்க்கலாம்" என்று அந்த வாலிபன் சொல்ல, அதை ஒப்புக்கொண்டவர்கலாய் இருவரும் ஆளுக்கொரு திசயாய் பிரிந்து சென்றனர்.
முதலில் அவர்கள் இருவரும் வேண்டியது தங்கள் உணவிற்காக, அந்த வாலிபன் கணிகளுடைய ஒரு மரத்தை கண்டு தன் பசியை போக்கிகொண்டான். ஆனால் அந்த பெரியவர் சென்ற திசையிலோ ஒன்றும் அகப்படவில்லை.
சில நாட்கள் சென்றபிறகு அந்த வாலிபன் தனிமயாக இருப்பதாக உணர்ந்து தனக்கொரு மனைவி வேண்டுமென வேண்டினான். அப்பொழுது கடலில் மிதந்து ஒரு பெண் அவனை தேடி வர, அவளை அவன் திருமணம் செய்துகொண்டான். பின்னர் தங்குவதற்கு வீடு, உணவு, உடை என தன் பட்டியலை நீட்டித்தான். ஆச்சர்யமாக மறுநாளில் அவை எல்லாமே அவனை தேடி வந்தது.
தீவு வாழ்க்கை சலித்துபோகவே அந்த வாலிபன் தன் மனைவியுடன் நாட்டுக்கு திரும்பநினைதான். எனவே இந்தமுறை தனக்கொரு கப்பல் வேண்டுமென வேண்டினான். மறுநாள் காலையில் தீவின் கரையோரமாக ஒரு கப்பல் வந்து நின்றதை கண்டு தன் மனைவியுடன் அதி ஏறி புறப்பட ஆயத்தமானான்.
அப்பொழுது வானத்தில் இருந்து ஒரு தேவதூதன் அவனை நோக்கி, "உன்னோடு வந்த உன் உடனாளியை இந்த தீவில் விட்டு நீ மட்டும் எங்கே புறப்பட்டாய்?" என்று கேட்டான்.
அதற்க்கு அந்த வாலிபன், "இவை அனைத்தும் நான் தேவனிடம் வேண்டி கிடைத்தவை, இவைகள் எனக்குரிய ஆசிர்வாதங்கள். நான் ஏன் அவரை அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்?" என்றான்.
உடனே அந்த தேவதூதன் "நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவை அனைத்தும் உன் வின்னபங்களுக்கு கிடைத்தது அல்ல, அந்த பெரியவரின் ஒரே ஒரு விண்ணப்பத்திற்கு கிடைத்த பதில்" என்று கூறினான். இதை கேட்ட அந்த வாலிபன் "அப்படி அவர் என்ன விண்ணப்பம் செய்தார்?" என்றான்.
"கடவுளே நீர் என்னோடு இருக்கிறீர், என்னை காக்கின்றீர். ஆனாலும் அந்த வாலிபன் சோர்ந்துபோகாமல் திடமனதாய் இருக்க, அவன் வீடு சென்று சேரும்வரை அவன் வேண்டுவது எல்லாவற்றையும் அவனுக்கு அருளவும்" - என்பதே அந்த பெரியவரின் விண்ணப்பம் என அந்த தேவதூதன் வெளிபடுத்தினான்.
நமக்கு கிடைப்பது எல்லாமே நமது பிரார்த்தனைக்கு மட்டுமே கிடைக்கும் பலன் அல்ல. நமக்காக வேண்டும் மற்றவர்களாலும் என்பதை மறக்கக்கூடாது.
தமக்காக வேண்டுவோரின் விண்ணப்பங்கள் தோற்கலாம், ஆனால் பிறருக்காக உண்மையாய் வேண்டினால் தேவன் நிச்சயம் பதிலளிப்பார்.
அதேபோல நாம் பிறருக்காக வேண்டும்போது நமக்காக பரிந்து பேச தேவதூதர்களே வருவார்கள் என்பதுவும் உண்மை.
(மத்தேயு 5:44-48)
Friday, May 29, 2009
ராஜ வஸ்திரம்
முன்பொரு காலத்தில் ஒரு அழகிய நாட்டை ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் தேவனுக்கும், மனிதனுக்கும், தன் மனதிற்கும் அஞ்சாதவனாய் வாழ்ந்துவந்தான். இப்படி இருக்க ஒருநாள் அவன் தனக்கு வாரிசு பிறந்ததை கொண்டாட ஒரு நாளை நியமித்து, அந்த நாளில் தன் ராஜியத்தின் மக்கள் கேட்கும் யாவற்றையும் அவரவர்களுக்கு கொடுக்க நினைத்தான். அந்த நாளும் வந்தது, அனைவரும் தனக்கு வேண்டியதை கேட்டு பெற்றுச்சென்றனர் . அந்த வேலை ஒரு மனிதன் ஒருவன் அவரிடத்தில் வந்து, எனக்கு மன்னர் அணிந்திருக்கும் ராஜவஸ்த்ரம் வேண்டும் என கேட்டான். அதை கேட்டு "இவன் தன் தகுதிக்கு மேல் கேட்கிறானே" என மன்னர் மிகவும் ஆத்திரம் அடைந்தார். ஆனாலும் ராஜா நியமித்த அந்த நாளில் அவனை தண்டிக்க மனதில்லாமல் அனுப்பிவிட்டார். அந்த மனிதனோ தினமும் மன்னரின் விசாரிப்பு நேரத்தில் முதல் ஆளாக வந்து, மன்னா எனது ஆசயை நிறைவேற்றுங்கள் என்று கேட்பதும்; அங்குள்ளவர்கள் அவனை வெளியில் அனுப்புவதும் வழக்கமான ஒரு செயலானது. இருப்பினும் அந்த மனிதன் தன் செயலை நிறுத்துவதாக இல்லை. யார் தடுத்தாலும் அவர்களையும் மீறி உள்ளே நுழைந்து விடுவான்; சில நேரங்களில் உள்ளே நுழைய முடியாவிட்டாலும் வாசலில் நின்றபடியே தன் குரலை உயார்த்தி "அரசே எனக்கு ராஜவஸ்த்ரம் அணிய ஆசை, அதை நிறைவேற்றுங்கள்" என்று மன்னர் காதுக்கு எட்டும்படி வேண்டுவான். யாருக்கும் அஞ்சாத அந்த அரசர் ஒருசமயத்தில் இவன் வருகிறான் என்றாலே பயந்து ஒதுங்கும் நிலை வந்தது. இந்த செயல் தொடரவே, இவன் தொல்லை தாங்கமுடியாத அரசர் ஒருநாள் அந்த மனிதனை உள்ளே அழைத்து அவனுக்கு ஒரு புதிய ராஜவச்திரத்தையும், அதனோடே கூட பொன்னையும் வெள்ளியும் கொடுத்தனுப்பினார்.
சாதாரண மனிதனே ஒரு விஷயத்தை நாம் விடாமல் கேட்டால் செய்கிறான் என்றால், தேவன் செய்யாதிருப்பாரோ?
எந்த ஒரு செயலையும், தோல்வியை பார்க்காமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
(லூக்கா 18:1-5)
சாதாரண மனிதனே ஒரு விஷயத்தை நாம் விடாமல் கேட்டால் செய்கிறான் என்றால், தேவன் செய்யாதிருப்பாரோ?
எந்த ஒரு செயலையும், தோல்வியை பார்க்காமல், சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
(லூக்கா 18:1-5)
Tuesday, May 26, 2009
சொந்த குமாரன்
வாலிப சகோதரர் ஒருவருக்கும் தேவ ஊழியருக்கும் இடையே நடந்த உரையாடல்.
வாலிபன்: தேவன்மீது எனக்கு அவ்வளவாக நம்பிக்கையோ, பாசமோ இல்லை. நேரம் கிடைத்தால், எதாவது வேண்டுமென்றால் ஆலயம் செல்வேன். அப்படி இருக்கும்போதே நான் எது வேண்டினாலும் தேவன் தருகிறார். இப்படி இருக்க ஏன் நண்பன் ஒருவன் எப்போதும் தேவனை பற்றியே பேசுகிறான், தவறாமல் ஆலயம் செல்கிறான், தேவனுக்கு பயந்து நடக்கிறான். ஆனால் பலன்..?? அவனை விட எனக்கு நான் நினைத்த எல்லாமே கிடைக்குதே...!!!
தேவ ஊழியர்: நீ சொன்னது சரிதான். ஆனால் நான் ஒரு நிகழ்வை சொல்கிறேன் அதன் பிறகு உன் முடிவை சொல்.
பணக்கார தந்தை ஒருவர் இருந்தார், அவருக்கு ஒரே மகன். ஒருநாள் அதிகாலையில் அவர் வீட்டின் வாசலில் ஒரு யாசகம் கேட்பவர் வந்து ஐயா ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று கேட்டான். உடனே அவர் சென்று கொஞ்சம் உணவும், பத்து ரூபாய் பணமும் கொடுத்துவிட்டு உள்ளே வந்தார். வீட்டின் உள்ளே நுழையும் நேரத்தில் தன் மகன் படுக்கையில் இருந்துகொண்டே தாயை நோக்கி இரவு வாங்கிவந்த தின்பண்டத்தை கேட்பதை கவனித்தார். உடனே உள்ளே சென்று தன் மகனிடம் நீ எழுந்து பல் துலக்கி உன்னை சுத்தம் செய்தால் மட்டுமே அவைகள் உனக்கு கிடைக்கும் என்று கூறினார். அந்த மகனும் அவ்வாறே செய்து அதை பெற்றுகொண்டான்.
தர்மம் கேட்டு வந்தவன் குளித்தானா, சுத்தமாக உள்ளன என்றெல்லாம் பார்க்கவில்லை ஆனால் அதே தன் சொந்த குமாரன் என்று வரும்போது இவைகளை தந்தை எதிர்பார்ப்பது நியாயம் அல்லவா...?
தர்மம் கேட்டு வந்தவன், தனக்கு வேண்டுமென்று கேட்டது கிடைத்தது (பத்து ரூபாயும், உன்ன ஒரு வேலைக்கான உணவும்). ஆனால் சொந்த குமாரனுக்கோ தந்தைக்கு உள்ள முழு உரிமை, ஆஸ்தி, அவருக்குரிய மற்ற எல்லாமே தானாகவே கிடைக்கும் அல்லவா..???
இப்பொது உனக்கும் உன் நண்பனுக்கும் உள்ள வித்யாசம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாலிபன்: மௌனம்...!!!!
(உபாகமம் 2:13)
வாலிபன்: தேவன்மீது எனக்கு அவ்வளவாக நம்பிக்கையோ, பாசமோ இல்லை. நேரம் கிடைத்தால், எதாவது வேண்டுமென்றால் ஆலயம் செல்வேன். அப்படி இருக்கும்போதே நான் எது வேண்டினாலும் தேவன் தருகிறார். இப்படி இருக்க ஏன் நண்பன் ஒருவன் எப்போதும் தேவனை பற்றியே பேசுகிறான், தவறாமல் ஆலயம் செல்கிறான், தேவனுக்கு பயந்து நடக்கிறான். ஆனால் பலன்..?? அவனை விட எனக்கு நான் நினைத்த எல்லாமே கிடைக்குதே...!!!
தேவ ஊழியர்: நீ சொன்னது சரிதான். ஆனால் நான் ஒரு நிகழ்வை சொல்கிறேன் அதன் பிறகு உன் முடிவை சொல்.
பணக்கார தந்தை ஒருவர் இருந்தார், அவருக்கு ஒரே மகன். ஒருநாள் அதிகாலையில் அவர் வீட்டின் வாசலில் ஒரு யாசகம் கேட்பவர் வந்து ஐயா ஏதாவது சாப்பிட கொடுங்கள் என்று கேட்டான். உடனே அவர் சென்று கொஞ்சம் உணவும், பத்து ரூபாய் பணமும் கொடுத்துவிட்டு உள்ளே வந்தார். வீட்டின் உள்ளே நுழையும் நேரத்தில் தன் மகன் படுக்கையில் இருந்துகொண்டே தாயை நோக்கி இரவு வாங்கிவந்த தின்பண்டத்தை கேட்பதை கவனித்தார். உடனே உள்ளே சென்று தன் மகனிடம் நீ எழுந்து பல் துலக்கி உன்னை சுத்தம் செய்தால் மட்டுமே அவைகள் உனக்கு கிடைக்கும் என்று கூறினார். அந்த மகனும் அவ்வாறே செய்து அதை பெற்றுகொண்டான்.
தர்மம் கேட்டு வந்தவன் குளித்தானா, சுத்தமாக உள்ளன என்றெல்லாம் பார்க்கவில்லை ஆனால் அதே தன் சொந்த குமாரன் என்று வரும்போது இவைகளை தந்தை எதிர்பார்ப்பது நியாயம் அல்லவா...?
தர்மம் கேட்டு வந்தவன், தனக்கு வேண்டுமென்று கேட்டது கிடைத்தது (பத்து ரூபாயும், உன்ன ஒரு வேலைக்கான உணவும்). ஆனால் சொந்த குமாரனுக்கோ தந்தைக்கு உள்ள முழு உரிமை, ஆஸ்தி, அவருக்குரிய மற்ற எல்லாமே தானாகவே கிடைக்கும் அல்லவா..???
இப்பொது உனக்கும் உன் நண்பனுக்கும் உள்ள வித்யாசம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாலிபன்: மௌனம்...!!!!
(உபாகமம் 2:13)
Monday, May 25, 2009
கண் தானம்
2008- வெளிவந்த ஒரு அறிக்கையின்படி நமது இந்தியாவில் மட்டும் 5 முதல் 10 லட்சம் பார்வையற்ற மக்கள் உள்ளனர். இதில் 90 சதவிகிதம் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், அதிலும் குறிப்பாக 60 சதவிகிதம் 12 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலில் இருபதாயிரம் பேர் கூடுதலாக இணைகின்றனர். கண்களின் தேவை ஏறக்குறைய பத்து லட்சமாக இருக்கும் இந்த நிலையில், கண் தானம் செய்பவர்களது எண்ணிகயோ 22,000-ஐ தாண்டவில்லை.
இறந்த பிறகு மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்தால் நாம் மரித்தாலும் வாழலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவேண்டும்.
யார் கண் தானம் செய்யலாம்:
கண் தானம் செய்ய வயதோ, மதமோ, இனமோ தடையில்லை. ஆண் / பெண் யார்வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம்.
கண் பார்வை குன்றியவர்கள், கண்ணாடி அணிந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை வியாதிகரர்கள், ரெத்த கொதிப்பு உள்ளவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.
(தகுதியான கண்கள் பிறருக்கு பொறுத்தப்படும், மற்றவை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும்)
எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டோர், B மற்றும் C வைரசால் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வந்தோர், ரெத்த புற்று நோய் உள்ளோர், காலரா நோயால் அல்லது வைரஸ் பரவலால் மரித்தோர் மற்றும் இறப்பிற்கான காரணம் தெரியாதோர் கண் தானம் செய்ய தகுதி இல்லாதவர்கள் ஆவர்.
கண் தானம் செய்ய விரும்புவோர் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
1. அருகில் உள்ள மருத்துவமனையில் பதிவு செய்யவேண்டும்
2. விலாசம் மாறினால் அதை அறிவிக்க வேண்டும்
3. இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்ணை எடுக்க வேண்டும் எனவே உறவினர்களுக்கு தெரிவித்து வைப்பது நல்லது
4. ஓட்டுனர் உரிமம் அல்லது ஏதேனும் முக்கிய (எப்போதும் கையில் உள்ள) ஆவணத்தில் கண்தான பதிவு பற்றிய குறிப்பு இருப்பது நல்லது
மேலும் விவரங்களுக்கு...
http://www.aravind.org/tamilweb/default.htm
http://www.sankaranethralaya.org/about_history.htm
(ரோமர் 16:2)
இறந்த பிறகு மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்தால் நாம் மரித்தாலும் வாழலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவேண்டும்.
யார் கண் தானம் செய்யலாம்:
கண் தானம் செய்ய வயதோ, மதமோ, இனமோ தடையில்லை. ஆண் / பெண் யார்வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம்.
கண் பார்வை குன்றியவர்கள், கண்ணாடி அணிந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை வியாதிகரர்கள், ரெத்த கொதிப்பு உள்ளவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.
(தகுதியான கண்கள் பிறருக்கு பொறுத்தப்படும், மற்றவை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும்)
எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டோர், B மற்றும் C வைரசால் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வந்தோர், ரெத்த புற்று நோய் உள்ளோர், காலரா நோயால் அல்லது வைரஸ் பரவலால் மரித்தோர் மற்றும் இறப்பிற்கான காரணம் தெரியாதோர் கண் தானம் செய்ய தகுதி இல்லாதவர்கள் ஆவர்.
கண் தானம் செய்ய விரும்புவோர் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
1. அருகில் உள்ள மருத்துவமனையில் பதிவு செய்யவேண்டும்
2. விலாசம் மாறினால் அதை அறிவிக்க வேண்டும்
3. இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்ணை எடுக்க வேண்டும் எனவே உறவினர்களுக்கு தெரிவித்து வைப்பது நல்லது
4. ஓட்டுனர் உரிமம் அல்லது ஏதேனும் முக்கிய (எப்போதும் கையில் உள்ள) ஆவணத்தில் கண்தான பதிவு பற்றிய குறிப்பு இருப்பது நல்லது
மனிதநேயம் இருந்தால் மரித்தாலும் வாழலாம்
கண் தானம் செய்வோம்; இருளான வாழ்வில் ஒளியேற்றுவோம்.
கண் தானம் செய்வோம்; இருளான வாழ்வில் ஒளியேற்றுவோம்.
மேலும் விவரங்களுக்கு...
http://www.aravind.org/tamilweb/default.htm
http://www.sankaranethralaya.org/about_history.htm
(ரோமர் 16:2)
Subscribe to:
Posts (Atom)