Tuesday, November 3, 2009

கண்ணால் காண்பதும் பொய்.

ஒரு நாள் ஒரு பெரியவர், சுமார் இருபது வயது மதிக்கத்தக்க தன் மகனுடன் ரயிலில் ஏறினார். அங்கே அவர்களுக்கு ஜன்னல் ஓரமாக இருக்கை கிடைத்தது. ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த வாலிபன் தன் தந்தையிடம்,

"அப்பா மரங்கள் எல்லாம் எவ்வளவு வேகமாக நகருகிறது;

இந்த இலையில் உள்ளதுதான் பச்சை நிறமா..?;

ரயிலின் புகை வேகமாக பறக்கிறதே..!

ஐயோ மழைத்துளி எவ்வளவு அழகாக இருக்கிறது...!!!"


என்ற ஆசிரிய வார்த்தைகளை அவ்வப்போது கூறிக்கொண்டே வர, தந்தை மட்டும் "ஆமாம், ஆமாம்" என்ற ஒற்றை பதிலை மட்டுமே கூறியவாறு வந்தார்.

இதை கண்ட மாற்ற அனைவரும் மிகவும் ஆத்திரமானார்கள், "என்ன இவன் பயித்தியம் போல பேசுகிறான், அவன் தந்தையும் எல்லாவற்றிற்கும் ஆமாம் போடுகிறார்". இவர்கள் இருவரும் நம்மை முட்டாளாக நினைத்து பேசுகிறார்கள் என ஆத்திரமடைந்து, அந்த தந்தையிடம் வாதிட்டனர்.

அப்போது அந்த தந்தை மிகவும் நிதானமாக, "எங்களால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும். என் மகன் பிறவியிலேயே பார்வை இழந்தவன். இப்போது தான் அறுவை சிகிச்சை முடிந்து அழைத்து வருகிறேன். அவன் உலகத்தை பார்ப்பது இதுவே முதல்முறை. அதனால் தான் இவ்வளவு ஆச்சர்யமாக எல்லாவற்றையும் ரசிக்கிறான்" என்று கூறவே, அனைவரும் ஊமைகளாயினர்.

நாம் கண்களால் காண்கிற காரியங்களைக்கொண்டு எதையும் உறுதிசெய்ய முடியாது. எதையும் தீர விசாரித்து செயல்படுவது நலம்.

No comments: