Tuesday, December 30, 2014

நீங்களே சொல்லுங்க! என் பதில் சரியா? இல்லையா??

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால்
பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்? அவன் அனைத்து கேள்விகளுக்கும்..
சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்.. வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..! 

கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..?
பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான.. பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?
பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்.. வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது..?
பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கிய காரணம் என்ன..?
பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு- பகல்.. எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில்;- கிழக்கே உதித்த சூரியன்.. மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்
மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்.. உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி.. எப்போது பிறந்தார்..?
பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்..!

கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார் கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக.. கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

கேள்வி;- 8மாம்பழங்களை.. 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!

இப்போ சொல்லுங்க! பதில் சரியா? இல்லையா??

Thursday, December 4, 2014

திட்டமிட்ட வாழ்கை இனிக்கும்???

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,
5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார். அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம இறுந்துடுவாங்க.


ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.

அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில் விட்டுடுங்கன்னு சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு.

அதற்கு ராஜா நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.

இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.

இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.
-
திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்!!
(நெட்டில் சுட்டது!!!)

Thursday, November 6, 2014

வங்காரி மாத்தாய்!

ஒரு நாள் ஒரு அடர்ந்தக் காட்டில் காட்டுத் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க யானை, சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள் செய்வதறியாது தவித்தன.

அவ்வமயம் ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவி மட்டும் எவ்வளவு வேகமாக பறக்க முடியுமோ அவ்வளவு வேகமாக பறந்து தனது சின்னஞ் சிறு அலகால் தண்ணீரை அள்ளி வந்து தெளித்தது.

இதைக் கண்ட பெரிய விலங்குகள் "நீயோ சின்னஞ் சிறு குருவி. உன்னால் என்ன செய்து விட முடியும்?" என்று கேட்டன!

அதற்கு அந்த குருவி "என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாம் அனைவரும் இதைத்தான் செய்ய வேண்டும்!!" என்றது.

இந்த கதையைச் சொன்னவர் வங்காரி மாத்தாய்(Wangari Maathai).

அவர் மேலும் "நானும் அந்தச் சிட்டுக் குருவி போல இந்த பூமி அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்வேன்.” என்றார்.

அவர் என்ன செய்தார் தெரியுமா?
கிரீன் பெல்ட் மூவ்மென்ட் (Green Belt Movement) என்ற இயக்கத்தை துவங்கி அதன் வாயிலாக கிட்டத்தட்ட 14 கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு பசுமரக் குடைகளை உருவாக்கியுள்ளார். அதற்காக 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.

"வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்."

Thursday, October 23, 2014

வலியை வழியனுப்பு...

வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் மேசைமீதிருந்த கண்ணாடி குடுவையை எடுத்து உயர்த்திக் காட்டி “இது எவ்வளவு எடை இருக்கும்?” என்று கேட்டார்.

அதற்க்கு "100 கிராம், 50 கிராம்" என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

உடனே ஆசிரியர் மாணவர்களை பார்த்து “இதன் சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனால் எனது கேள்வி அதுவல்ல”;  “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?” என்று கேட்டார்.

மாணவன்: “ஒண்ணுமே ஆகாது சார்”

ஆசிரியர்: "மிகச்சரியான பதில்! ஆனால் ஒரு மணி நேரம் இப்படியே வைத்துக்கொண்டிருந்தால்…?”

மாணவன்: “உங்க கை வலிக்கும் சார்”

ஆசிரியர்: “ஒருநாள் முழுவதும் இப்படியே வைத்துக்கொண்டிருந்தால்…?”

மாணவன்: “உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

ஆசிரியர்: “மிக மிக சரியான பதில்! ஒரு மணி நேரத்துலே என் கை வலி ஏற்படுவதற்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுவதற்கும் இந்த குடுவையின் எடை கூடிக்கொண்டே போகுமா என்ன?”

மாணவன்: “இல்லை சார். அது வந்து…?!?”

ஆசிரியர்: “எனக்கு கை வலிக்காமல், மரத்துவிடாமல் இருக்கவேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?”

மாணவன்: “குடுவையை உடனே கீழே வெச்சுடணும் சார்”

ஆசிரியர்: "மிக நேர்த்தியான பதில். பிரச்சினை இந்த குடுவைதான்"

ஒரு பிரச்சினை நமக்கு வந்தால் அதை அப்படியே மண்டைக்குல் ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் வலிக்க ஆரம்பிக்கும்.

ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருந்தாள் மூளை செயலிழந்து மரத்துபோயவிடும்..

அதனால்
உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு உங்கள் வேலையை தொடருங்கள். அந்த பிரச்சனை தன்னால் தீரும்.

Monday, September 22, 2014

என்னுடைய மகிழ்ச்சி எங்கே????

ஒரு பெரிய ஹாலில் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் உள்ள குடுவையில் போடச் சொன்னார். அதன்பின் அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள்ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டும்  தள்ளிக்கொண்டும் கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 

5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், 

'ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்' என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.


இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், 'இது தான் வாழ்க்கை! எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை!!'


"நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது." 


அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,
உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்!!!

Friday, September 12, 2014

பற்றாக்குறை..!!

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார்,
உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.

ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.

ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
மாணவன் அமைதி காக்கிறான்.

சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.

மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?
ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா?

மாணவன்: மன்னிக்கவும்.தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

இருள் என்ற ஒன்று இருக்கிறதா?
ஆசிரியர் : ஆம், இருக்கிறது.
மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம்.

உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல.

அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.
உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை.

அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

நெட்டில் சுட்ட ரொட்டி..!! நன்றாக இருப்பதால் பகிர்கிறேன்.

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,
“பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்” என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து “என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?”என்று கேட்டார்.

“ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை பிஸ்கட்பாக்கெட் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது பிஸ்கட்பாக்கெட் யை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்.” என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.

சரிக்கு சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை!?!

Saturday, August 30, 2014

மின் விசிறிகள்...

தனது அன்னையை கடந்த இருபது வருடங்களாக முதியோர் இல்லத்தில் விட்டு பராமரித்து வந்தார் அந்த பாக்யவான்.

மாதம் தவறாமல் தொகை செலுத்துவார். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதோ கடமைக்கு தனது அன்னையை முதியோர் இல்லம் சென்று பார்த்து வருவது அவர் வழக்கம்.

ஒரு நாள் அவரின் தாயார் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்தது.

சட்டென்று நினைவு வந்தவராக ஓடோடி பார்க்க சென்றார்.. சாகும்தருவாயில் இருந்த தாயிடம் கரிசனமாய் கேட்டார் "அம்மா உனக்கு என்ன வேனும் கேள் வாங்கி தருகிறேன்!"

தளர்ந்து போன நிலையிலும் தாய் கேட்டாள்.. "இந்த முதியோர் இல்லத்திற்கு மின் விசிறிகள் இல்லை. வாங்கி தந்து உதவு என்றாள்.."

இதுநாள் வரை நீ இதைக்கேட்கவே இல்லையே! என்று ஆச்சரியத்துடன் கேட்டான் மகன்..

மேலும் சாகும் நிலையில் இதை ஏன் கேட்கிறாள் என குழம்பினான்..!!

தாய் சொன்னாள்..
"நான் என் கஷ்டத்தை பொறுத்துக்கொண்டேன்.. ஆனால் சில நாளில் உன் மகன் உன்னை கொண்டு வந்து இங்கு சேர்க்கும் போது என் மகன் கஷ்டப்படக்கூடாது அல்லவா அதற்க்காகத்தான் என்றாள் தாய்.

மகனை ஆவளாய் பார்த்த அவள் கண்கள் மூடின. உயிர் பிரிந்தது..!
அவன் நெஞ்சம் கனத்தது. கண்களின் ஓரம் நீர்த்துளிகள்..!!