கடல் வணிகர் ஒருவர் தனது பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தால் ஒரு குட்டி தீவை அடைந்தார். அது ஒரு மணல் திட்டால் ஆனா தீவாக இருந்ததால் அவருக்கு ஒதுங்க கூட ஒரு நிழல் இல்லை. பச்சை மீன்களே உணவாக போனது. இப்படியே நாட்கள் நகர, உதவ கூட ஆள் இல்லாத நிலையில் அவர் தேவனை நோக்கி வேண்டினார். அவர் தேவனுக்கு முன்பாக உண்மையும் உத்தமமுமாக இருந்தபடியால் அவரது ஜெபம் கேட்கப்பட்டது. மறுநாள் காலையில் அந்த தீவருகே ஒரு சிறிய குடிசை மிதந்து வந்தது. அதில் அனைத்து விதமான உணவுகளும் இருந்தது. தேவனுக்கு நன்றி சொல்லிய அந்த மனிதன் அதை எடுத்து பயன்படுத்திக்கொண்டார். அதில் இருந்த உணவுகள் தீர்ந்த நிலையில், தேவனை தன்னை சீக்கிரம் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டு பின்னர் மீன் பிடிக்க சென்றுவிட்டார்.
நேரம் சென்று திரும்பிய அவர் தனது குடிசைக்கு நேராக ஒரு மின்னல் தாக்குவதையும் அதனால் தன் குடிசை தீ பற்றி எரிவதையும் கண்டார். மனம் தாளாத வேதனையினால் கலங்கிப்போன அவர், தன்னை அறியாமலேயே உறங்கிவிட்டார். மறுநாள் காலை ஒரு கப்பல் தனது தீவை நோக்கி வருவதை கண்டு உற்சாக வெள்ளத்தில் குதித்த அவர், அந்த கப்பலின் மாலுமியிடம் "நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்?" என கேட்டார். அதற்க்கு அந்த மாலுமி, "நேற்று இரவு இங்கே தீயின் வெளிச்சம் தெரிந்தது, அதை கண்டே நாங்கள் வந்தோம்" என்றார்.
தேவனுக்கு நன்றி கூரியவராய் அவர் அந்த கப்பலில் புறப்பட்டார்.
தேவன் ஒரு ஆசிர்வாதத்தை கொடுத்தாலும், அதை எடுத்தாலும் நிச்சயம் அது நன்மைக்காகத்தான் இருக்கும்.
(எண்ணாகமம் 23:19)
Monday, August 17, 2009
Tuesday, August 11, 2009
சந்தோஷத்தின் சாவி
என் தாய்க்கு தினமும் விதவிதமான உணவுகளை செய்து அசத்துவது வழக்கம். அதிலும் இரவு உணவு மிகவும் சிரமம் எடுத்து சிறப்பாக செய்வார்கள். ஒரு நாள் இரவு நானும் என் தந்தையும் இரவு உணவிற்காக காத்திருந்தோம். அப்பொழுது என் தாய் கருகிய நிலையில் இருந்த ரொட்டிகளையும், முட்டையும் கொண்டுவந்து என் தந்தை முன்னால் வைத்தார்கள். நானோ என் தந்தையை பார்த்தவாறே எனக்கு வைக்கப்பட்ட நல்ல ரொட்டிகளை சாப்பிட்டு முடித்தேன். என் தந்தையும் ஏதும் கூறாமல் வைத்த அனைத்து ரொட்டிகளையும் சாப்பிட்டு முடித்தார்.
நான் அங்கிருந்து எழுந்தவுடனே என் தந்தையிடம் கருகிய ரொட்டிகளை வைத்ததற்க்காக என் தாய் வருந்தியதையும் நான் கவனிக்க தவறவில்லை. அதே சமயம் என் தந்தையோ "நீ இதற்க்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம். ரொட்டிகள் முறுகலாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்" என்று என் தாயிடம் கூறினார்.
எல்லாம் முடிந்து நான் என் தந்தையுடன் படுக்கையறைக்கு சென்றேன், அப்போது நான் என் தந்தையிடம் கேட்டேன், "நிஜமாகவே உங்களுக்கு ரொட்டிகள் கருகியிருந்தால் பிடிக்குமா?".
அவர் புன்னகையுடன், "நிச்சயம் இல்லை. ஆனால் எப்போதும் உன் தாய் சிறப்பான உணவையே நமக்கு வழங்குவாள். அப்படி இருக்க, இன்று இப்படி கொடித்திருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் அதிக வேலையினால் சோர்ந்து போயிருக்கவேண்டும். இந்த நிலையில் நானும் அவளை குறை கூறினால் அவள் இன்னும் சோர்ந்துவிடுவாள்." என்றார்.
மேலும் அவர், "நான் அவளோடு வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில் அவளுக்கு உதவியாக இருக்க தவறினாலும், அவளை புரிந்துகொள்ளவும், அவள் தவறுகளை பொறுத்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டேன்." என்று கூறினார்.
நமது சந்தோஷத்தின் சாவி நம்மிடம் தான் இருக்கவேண்டும், அதை இன்னொருவர் பையில் போட்டுவிட்டால் நம் வாழ்க்கை இன்பமாக இருக்காது.
இவை அனைத்துக்கும் அன்பே பிரதானம்.
(1 கொரிந்தியர் 13:1-10)
நான் அங்கிருந்து எழுந்தவுடனே என் தந்தையிடம் கருகிய ரொட்டிகளை வைத்ததற்க்காக என் தாய் வருந்தியதையும் நான் கவனிக்க தவறவில்லை. அதே சமயம் என் தந்தையோ "நீ இதற்க்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம். ரொட்டிகள் முறுகலாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்" என்று என் தாயிடம் கூறினார்.
எல்லாம் முடிந்து நான் என் தந்தையுடன் படுக்கையறைக்கு சென்றேன், அப்போது நான் என் தந்தையிடம் கேட்டேன், "நிஜமாகவே உங்களுக்கு ரொட்டிகள் கருகியிருந்தால் பிடிக்குமா?".
அவர் புன்னகையுடன், "நிச்சயம் இல்லை. ஆனால் எப்போதும் உன் தாய் சிறப்பான உணவையே நமக்கு வழங்குவாள். அப்படி இருக்க, இன்று இப்படி கொடித்திருக்கிறாள் என்றால் நிச்சயம் அவள் அதிக வேலையினால் சோர்ந்து போயிருக்கவேண்டும். இந்த நிலையில் நானும் அவளை குறை கூறினால் அவள் இன்னும் சோர்ந்துவிடுவாள்." என்றார்.
மேலும் அவர், "நான் அவளோடு வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில் அவளுக்கு உதவியாக இருக்க தவறினாலும், அவளை புரிந்துகொள்ளவும், அவள் தவறுகளை பொறுத்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டேன்." என்று கூறினார்.
நமது சந்தோஷத்தின் சாவி நம்மிடம் தான் இருக்கவேண்டும், அதை இன்னொருவர் பையில் போட்டுவிட்டால் நம் வாழ்க்கை இன்பமாக இருக்காது.
இவை அனைத்துக்கும் அன்பே பிரதானம்.
(1 கொரிந்தியர் 13:1-10)
Subscribe to:
Posts (Atom)