
இறந்த பிறகு மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்தால் நாம் மரித்தாலும் வாழலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவேண்டும்.
யார் கண் தானம் செய்யலாம்:
கண் தானம் செய்ய வயதோ, மதமோ, இனமோ தடையில்லை. ஆண் / பெண் யார்வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம்.
கண் பார்வை குன்றியவர்கள், கண்ணாடி அணிந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை வியாதிகரர்கள், ரெத்த கொதிப்பு உள்ளவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள் கூட கண் தானம் செய்யலாம்.
(தகுதியான கண்கள் பிறருக்கு பொறுத்தப்படும், மற்றவை ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும்)
எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டோர், B மற்றும் C வைரசால் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வந்தோர், ரெத்த புற்று நோய் உள்ளோர், காலரா நோயால் அல்லது வைரஸ் பரவலால் மரித்தோர் மற்றும் இறப்பிற்கான காரணம் தெரியாதோர் கண் தானம் செய்ய தகுதி இல்லாதவர்கள் ஆவர்.
கண் தானம் செய்ய விரும்புவோர் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
1. அருகில் உள்ள மருத்துவமனையில் பதிவு செய்யவேண்டும்
2. விலாசம் மாறினால் அதை அறிவிக்க வேண்டும்
3. இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்ணை எடுக்க வேண்டும் எனவே உறவினர்களுக்கு தெரிவித்து வைப்பது நல்லது
4. ஓட்டுனர் உரிமம் அல்லது ஏதேனும் முக்கிய (எப்போதும் கையில் உள்ள) ஆவணத்தில் கண்தான பதிவு பற்றிய குறிப்பு இருப்பது நல்லது
மனிதநேயம் இருந்தால் மரித்தாலும் வாழலாம்
கண் தானம் செய்வோம்; இருளான வாழ்வில் ஒளியேற்றுவோம்.
கண் தானம் செய்வோம்; இருளான வாழ்வில் ஒளியேற்றுவோம்.
மேலும் விவரங்களுக்கு...
http://www.aravind.org/tamilweb/default.htm
http://www.sankaranethralaya.org/about_history.htm
(ரோமர் 16:2)
2 comments:
Very useful information...
Thanks.... its not only to read or share. Try do do something gud.
Post a Comment