
காலங்கள் ஓடின, ஆனால் அவன் அதன் பின் தன் தந்தையை பர்கமலே வாழ்ந்துவந்தான். ஒரு நாள் தன் தந்தை இறந்துவிட்டதாக தகவல் வரவே, பதறிய வண்ணமாய் அவரை காண சென்றான். அவருக்கான இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்த நிலையில், தன் தந்தையின் அறையை சுத்தம் செய்ய நுழைந்தான். அங்கே அவன் கண்டது, பலவருடங்களுக்கு முன் தான் வைத்துச்சென்ற அந்த பைபிள்.
அதை எடுத்து மெல்ல ஒவ்வொரு பக்கமாய் திருப்பினான், அப்பொழுது அதன் உரையில் இருந்து ஒரு "பரிசு அட்டை" விழுந்தது. அந்த அட்டையில் தான் வாங்க நினைத்த கார் நிறுவனத்தின் முகவரியும், முழுவதுமாக பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதும், அது அவன் பட்டம் பெற்ற தேதியை கொண்டதாகவும் இருந்தது. அதை கண்ட மகன் கதறி அழுதான்.
இப்படி தான் பல வேலையில், நம் எதிர்பார்க்கும்படி தான் தெய்வம் தரும் என்று நினைப்போம். அப்படி நினைத்து நமக்கு வரும் ஆசிர்வாதங்களை பலமுறை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.
என் (தேவன்) நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல........உங்கள் நினைவுகளை பார்க்கிலும் என் நினைவுகள் உயர்ந்திருக்கிறது. (ஏசாயா 55:8,9)
No comments:
Post a Comment