
ஒரு அழஅகிய கிராமத்தில் ஏழை பெண் ஒருத்தி வாழ்ந்துவந்தாள். அவளிடம் அழகான இரண்டு பானைகள் இருந்தன, அவள் வீட்டில் இருந்து தண்ணீர் துறை சற்றே தூரமாக இருந்ததால் அவள் தினமும் அங்கு சென்று அவளது இரண்டு பானையிலும் தண்ணீர் கொண்டுவருவது வழக்கம். இவ்வாறு அவள் செய்கையில் ஒரு நாள் அவளது இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய விரிசல் விழுந்தது; அதனால் அந்த பானையில் இருந்து தண்ணீர் சிந்துவதும் வழக்கமானது. அதனால் அவள் இரண்டு குடம் தண்ணீர் கொண்டுவந்தாலும், வீட்டில் சேர்ப்பது ஒன்றரை குடம் மட்டுமே; அந்த ஓட்டை குடத்தில் இருந்து பாதி தண்ணீர் சிந்திவிடும். இப்படியே ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழிந்தன.
அந்த ஓட்டை குடம், தான் குடம் நிறைய நீரை சுமப்பதற்காக செய்யபட்டளும் நம்மால் அரை குடம் மட்டுமே சுமக்க முடிகிறதே என்ற வருத்ததுடனே இருந்துவந்தது. அதே சமயம் அந்த நல்ல பானை, தான் சுமக்கும் முழு குட தண்ணீருக்காக பெருமையுடன் இருந்தது.
ஒரு நாள் அந்த ஓட்டை பானை தன் எஜமாட்டியான அந்த பெண்ணை பார்த்து, "நான் குடம் நிறைய தண்ணீர் சுமப்பேன் என்ற நம்பிக்கையில் நீங்கள் என்னை வாங்கினீர்கள். ஆனால் என்னாலோ அரை குடம் மட்டுமே சுமக்கமுடிவதர்கக வருந்துகிறேன்" என்றது.
அதை கேட்ட அந்த பெண், "நீ உடைந்திருக்கும் நிலையிலும் நான் உன்னை இரண்டு வருடமாக சுமக்கிறேன் என்றால் அதில் நிச்சயம் ஒரு காரணம் உள்ளது. நீ கவனித்தாயா எனபது எனக்கு தெரியாது, ஆனால் உடைந்த உன்னிலிருந்து நீர் கசிய தொடங்கின நாள்முதல் நாம் தண்ணீர் சுமந்துவரும் பாதயில் நீ இருக்கும் பக்கத்தில் நிறைய பூச்செடிகளும், காய் செடிகளும் நட்டுவைத்தேன் அவைகளுக்கு உன் நீர் ஆகாரமானதல் அவைகள் தன் பலனை கொடுத்தன. அதேசமயம் நல்ல பானயுள்ள பக்கத்திலோ வெறுமையை இருக்கிறது. நீ எனக்கு அரை குடம் நீர் சுமந்தாலும் உன்னால் நான் பெற்ற பிற நன்மைகள் அதிகம்."
நாம் நமது குறைகளை நினைக்கும் வேலையில், தேவன் நமது நிறைகளை நினைத்து நமை ஆசிர்வதிக்கிறார் என்பதை மறக்கக்கூடாது.
(1 கொரிந்தியர் 15:43)
2 comments:
very very nice
Thanks. Thank you so much mercy. Keep visiting regularly.
Post a Comment