Friday, June 19, 2009

தேவனின் கடிதம்

அழகிய சிற்றூர், அதிகாலை நேரம் "ரூத்" என்ற பெண்மணி வீட்டின் தபால் பெட்டியில் ஒரு கடிதம் விழுந்த சத்தம் கேட்டது. உடனே அவள் அந்த கடிதத்தை எடுக்க சென்றால்; தபால்காரன் வந்து போன அறிகுறியும் இல்லை, "அனுப்புனர்" முகவரியும் இல்லை, தபால் தலையும் இல்லை.

அந்த கடிதத்தில்,
"இன்று மாலை நான் உங்கள் வீட்டுக்கு உணவருந்த வருகிறேன். அன்புடன், - கடவுள்"

என்று எழுதியிருப்பதை கண்டு அவளுக்கு மிகவும் ஆச்சர்யம். கடவுள் வருகிறார் என்றல் எதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்று தன் சமயலறைக்கு சென்றால். ஆனால் அவளது வறுமை அங்கேயும் தெரிந்தது. என்ன செய்வது என்று அறியாத அவள், தன் பண்ப்பியை நோக்கினால். அதில் சில்லரையாக 50 ரூபாய் இருந்தது, உடனே அதைக்கொண்டு சில ரொட்டி துண்டுகளும் கொஞ்சம் கறியும் வாங்கி உணவை தயார் செய்துகொண்டிருந்தால்.

அப்போது "கருணை உள்ளம் கொண்ட தாயே, வெளியே வந்து எங்களுக்கு உதவவேண்டும்" என்று ஒரு குரல். அவள் சென்று பார்த்தால், அங்கே மிகவும் வயதுசென்ற ஒரு பெரியவர் தன் மனைவியுடன் நின்றார். ரூத்தை கண்ட அவர், "தாயே நாங்கள் மிகவும் பசியாய் இருக்கிறோம். உங்களால் முடிந்தால் எங்களுக்கு எதாவது உதவுங்கள்" என்று சொன்னார். அதற்க்கு அவள், "ஐயா நானும் ஒன்றும் பெரிய வசதி கொண்டவள் இல்லை. என்னிடம் கொஞ்சம் ரொட்டிகள் மட்டுமே உள்ளது, ஆனாலும் இன்று இரவு ஒரு முக்கியமான விருந்தாளி வருகிறார்" என்றல். அதை கேட்ட அவர், சரி அம்மா பரவாயில்லை என்று கூறி அங்கிருந்து தளர்ந்த நடையுடன் புறப்பட்டார்.

இருந்தும் மனது கேட்காத ரூத், அவர்களை நோக்கி "ஐயா ஒரு நிமிடம் பொறுங்கள், என் விருந்தாளியிடம் நான் எதாவது சொல்லி சமாளித்துகொள்கிறேன். தேவையுடைய நீங்கள் இந்த உணவை கொண்டுசெல்லுங்கள்" என்று கூறி, தான் தயார் செய்த அனைத்தையும் அவர்களிடம் கொடுத்து அனுப்பினாள். அப்போது அந்த பெரியவரின் மனைவி குளிரினால் வாடிகொண்டிருப்பதை கண்ட அவள், என்னிடம் இன்னொரு மேலாடை உள்ளது நீங்கள் இதை கொண்டுசெல்லுங்கள் என்று தான் அணிந்திருந்ததை கழற்றி அவர்களிடம் கொடுத்தால். அவர்களும் சந்தோசமாக பெற்றுக்கொண்டு சென்றனர்.

பின்னர் அவள் தனியாக அமர்ந்து தேவன் வந்தால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள், அப்பொழுது மறுபடியும் தபால் பெட்டியில் ஒரு கடிதம் விழும் சத்தம் கேட்டது. ஒரே நாளில் தபால்காரன் இருமுறை வர மாட்டான், அதுவும் இந்த இரவில் நிச்சயம் வரமாட்டன் என அறிந்தும் அவள் சென்று பார்த்தால். மீண்டும் அதேவிதமான கடிதம்,

"நீ கொடுத்த இரவு விருந்துக்கு மிக்க நன்றி. மேலும் நீ கொடுத்த ஆடை மிகவும் நன்றாக இருந்தது, அதற்கும் நன்றி. அன்புடன், -கடவுள்"

"மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்"
(மத்தேயு 25:40,45)

No comments: