
விவசாய திருவிழாவில்தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக "சிறந்த விவசாயி" பரிசுபெறும் அந்த விவசாயிக்கும் பத்திரிக்கயாளருக்கும் நடந்த உரையாடல்.
பத்: நீங்கள் பெற்ற இந்த விருதைப்பற்றி சொல்லமுடியுமா..?
விவ: தொடர்ந்து ஐந்தவதுமுறையாக இதை பெறுகிறேன். மிக்க மகிழ்ச்சி. அதிக மகசூல் மற்றும் சிறந்த தரமான சோள விளைச்சலுக்காக இதை பெறுகிறேன்.
பத்: இந்த தரமான விளைச்சல் பெற்றதற்க்கான ரகசியத்தை கூறமுடியுமா..?
விவ: இதில் எந்த ரகசியமும் இல்லை. நல்ல தரமான விதை, முறையான விவசாயம். இதுவே இந்த aபரிசுக்கு காரணம்.
பத்: தரமான விதையென்று கூறுகிறீர்கள் ஆனால் அதை உங்கள் பக்கத்து நிலகாரர்களுடனும் நீங்கள் பகிர்ந்துகொள்கிறீர்கள். அது உங்களுக்கு போட்டியை ஏற்படுத்தாதா..?
விவ: நிச்சயமாக போட்டி வரும். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் அறியவேண்டும். சோள விளைச்சலின் காலத்தில் சூறைக்காற்று அடிப்பதும் அப்போது அது சோள செடியின் விந்தைகொண்டுவந்து அருகே உள்ள நிலங்களில் தெளிப்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி வந்து விழும் விந்து தரமானதாய் இருந்தால் விளைச்சல் தெளிவாக இருக்கும், இல்லையென்றால் அது நமது விளைச்சலையும் தரத்தையும் சேர்த்து கெடுக்கும். எனவே என் தரமான விதையை கொண்டு அவர்களும் வாழ்கிறார்கள், அதனால் நானும் வாழ்கிறேன்.
நீ வாழ பிறரை கெடுக்காதே என்பதைவிட, நீ வாழ பிறரையும் வாழவை என்பதே சரி.
2 comments:
s nega this lines all good, and true, but nega apade irupegala??????
Thanks for your comment gavury. Thanks to visit my page. Make regular visit and go throuhg other postings too..
Post a Comment