Monday, July 20, 2009

தந்தயின் கரம்....

ஓர் அடர்ந்த காட்டு பகுதியில் குட்டி பெண்ணும் அவளது தந்தையும் நடந்து சென்றனர். வழியில் அவர்கள் ஒரு பெரிய கயிற்றுப்பாலத்தை கடக்க நேரிட்டது. அப்போது அந்த தந்தை தன் மகளிடம், "இது கயிற்றுப்பாலம் என்பதால் மிக குறுகலாக இருக்கும். எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க என் கரத்தை நன்றாக பிடித்துக்கொள்" என்றார்.

அதற்க்கு அந்த குட்டி பெண், "இல்லை..! இல்லை ..! நீங்கள் என் கரத்தை பிடித்துக்கொள்ளுங்கள்" என்றால். அதன் அர்த்தம் புரியாமல் அந்த தந்தை "இது என்ன புதிர்?" என்று கேட்க.

அந்த குட்டி பெண், "நான் உங்கள் கரத்தை பிடித்தால் எதாவது ஒரு சூழ்நிலையில் நான் அதை விட நேரலாம். ஆனால் நீங்கள் என் கரத்தை பிடித்தால் எந்த சூழ்நிலையிலும் என்னை விடமாட்டீர்கள் என்று நான் நன்றாக அறிவேன்." என்றால்.


இதே போல தான் தேவனோடு நாம் கொண்டுள்ள உறவும்.

நாம்
அவர் கரத்தை பிடித்திருக்கிரோமா..?

அல்லது
அவரை நமது கரத்தை பிடித்து நடத்த அனுமதித்திருக்கிரோமா..?

நாம் தேவனின் கரத்தில் நம்மை முழுதாக ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை செம்மையான பாதையில் பத்திரமாக நடத்துவார்.

(ஏசாயா 41:10)

2 comments:

Unknown said...

very nice..keep it up.May God bless u anna

..செந்தில் said...

Thanks for your visit and comment. God bless.