Friday, June 5, 2009

சுயமதிப்பீடு

மிகப்பெரிய பேச்சாளர் ஒருவர் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அறையில் பேசிக்கொண்டிருந்தார், அப்போது தன் பேச்சின் நடுவே ஒரு 500 ரூபாய் பணத்தை தன் கையில் உயர்த்தியபடி இந்த பணம் யாருக்கு வேண்டும் என்று கேட்டார். அங்கிருந்த அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்தினர், உடனே அந்த பேச்சாளர் அந்த பணத்தை தன் கைகளால் நன்றாக கசக்கி பின்னும் "இது யாருக்கு வேண்டும்?" என கேட்டார். அபோதும் அனைவரும் தன் கரங்களை உயர்த்தினர். பின்னர் அதை தரையில் போட்டு தன் காலால் கசக்கி அழுக்காக்கி எடுத்து திரும்பவும் "இது யாருக்கு வேண்டும்?" என கேட்டார். மீண்டும் கைகளின் உயரம் குறையவில்லை.

உடனே அந்த கூடத்தில் இருந்த ஒருவரை நோக்கி, "புதிய பணம் என்றாலும் வேண்டும் என்கிறீர், கசங்கினாலும் வேண்டும் என்கிறீர், அழுக்கனாலும் வேண்டும் என்கிறீர், ஏன் என்று கூறமுடியுமா?" என கேட்டார். அதற்க்கு அவன் "எந்த நிலையானாலும் அந்த பணத்தின் மதிப்பு மாறவில்லையே !" என்றன்.

அங்கே கூடியிருந்தவர்களை பார்த்து அந்த பேச்சாளர், "இதுபோல தான் மனித வாழ்வும். அழகான கசங்காத ரூபாய் நோட்டை போல தான் அனைவருமே தங்கள் வாழ்வை துவங்குகிறோம். ஆனால் வாழ்க்கையில ஏற்படும் சில சோதனைகளாலும், தோல்விகளாலும் நாம் நம்மையே குறைத்து மதிபிடுகிறோம். ரூபாய் நோட்டு புதிதானாலும், பழையதானாலும், கசங்கினாலும், அழுக்கனாலும் அதன் மதிப்பு குறைவதிள்ளயோ, அப்படித்தான் நாம் ஒவ்வொருவரின் மதிப்பும். இதை ஒரு மனிதன் எப்போது உணர்கிறானோ அப்போதே அவன் வாழ்வில் வெற்றியாளனாக மாறிவிடுகிறான்" என்றார்.

நமைப்பற்றி பிறரைவிட நன்றாக அறிந்தவர் நாம் தான்.
நமை மதிப்பீடு செய்ய நாமே சிறந்தவர்.

நமது சுயமதிப்பீடும், நல்லோர் ஆலோசனையும் இருந்தால் நமது வெற்றியை யாராலும் மாற்றமுடியாது.


4 comments:

Unknown said...

Very nice

..செந்தில் said...

Thanks for your visit mercy. Welcome again to enjoy other posts too. May god bless you.

Unknown said...

ya it is true.first we have to believe ourself...

..செந்தில் said...

Thanks for your visit and comment Emmi. God bless. Visit regularly and check other postings too.