Tuesday, April 28, 2009

நீ வேண்டினது எதுவோ....!!!!


ஒரு ஊரில் கணவனை இழந்த ஒரு பெண் இருந்தால், அவளுக்கு ஒரே ஒரு மகன். தன் மகனை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கவேண்டும் என்பது அவளது கனவு. அதற்காக அவள் மிகவும் கஷ்டப்பட்டு அவனை படிக்கவைத்து, வேலைக்காக வெளிநாட்டிற்கும் அனுபினால். வெளிநாடு சென்ற மகன் தவறாமல் ஒவ்வொரு மாதமும் கடிதம் போடுவான், ஆனால் அவளுக்கு படிக்க தெரியாததால் அவைகளை எல்லாம் தன் வீட்டின் சுவற்றில் ஒட்டிவைத்துவந்தால். மகனிடம் இருந்து பணம் ஏதும் வராததினால் அவள் வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து வந்தால், ஒரு நாள் மரித்தும் போனால்.

தாய் இறந்த செய்தி அறிந்த மகன் தன் சொந்த ஊருக்கு திரும்பினான், அவளுக்கான இறுதி கடமைகளை முடித்து அமர்ந்த நிலையில் அந்த ஊர் பெரியவர் ஒருவர் அவனிடத்தில் வந்து "உன் தாய் உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார்கள் அனல் அவளை இப்படி பட்டியல் சாக விட்டாயே" என்று கேட்டார். அதற்கு அவன், இல்லை ஐயா நான் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நான் ரூபாய் இருபதாயிரம் அனுபினேன் என்றன். அனால் ஏன் அது அவளுக்கு வந்து சேரவில்லை என்று பார்க்க அவர்கள் வீட்டின் உள்ளே விரைந்தனர். அங்கே ஒட்டப்பட்ட ஒவ்வொரு கடிதத்தின் அருகிலும் ஒரு காசோலையும் இருந்தது.

இப்படிதான் பலசமயங்களில் நமது நிலைமையும் உள்ளது,

"நாம் நமக்கு வேண்டியதற்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறோம், அவரும் கொடுத்துவிடுகிறார் (தானியேல் 9:23); ஆனால் அதை உணராமல் நமது சுயத்தினால் அதை இழந்துவிடுகிறோம்"

No comments: