Wednesday, February 18, 2009

முயற்சி - குட்டிக் கதை

ஒரு நாள் ஒரு பெரிய கப்பல் பழுதாகி நின்றது, அப்பொழுது அந்த கப்பலின் முதலாளி அதை சரி செய்ய பற்பலரை கொண்டுவந்தார். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு எல்லாவற்றையும் சரிசெய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் அதை சரி செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் கப்பல் முதலாளிக்கு அந்த கப்பல் தயார் செய்தபோது அதில் வேலை செய்த ஒருவன் நினைவுக்கு வந்தான். ஆனால் அவன் இப்பொழுது மிகவும் வயதானவனாக இருப்பான். எப்படியோ கப்பல் தயார் ஆனால் போதும் என்று நினைத்து அவனை அழைத்து வர சொன்னார்.

அந்த பெரியவர் தன் கையில் ஒரு பழைய பெட்டியுடன் வந்தார். அவரிடம் நிலைமையை கூறிய கப்பல் முதலாளி அவரை கப்பலுக்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற அந்த பெரியவர், சிறிது நேரம் நன்றாக கப்பலை ஆராய்ந்தார், பின்னர் தன் பையில் இருந்து ஒரு சுத்தியலை எடுத்து அந்த கப்பலில் இருந்த ஒரு குழாயின் மேல் லேசாக தட்டி அதை சரிசெய்துவிட்டு சென்றார்.

கொஞ்ச காலம் சென்ற பின்பு அந்த பெரியவர் கப்பல் முதலாளி தனக்கு கொடுக்க வேண்டிய கூலியை கேட்டு கடிதம் போட்டார். அதில் ரூபாய் பத்தாயிரம் கேட்கப்பட்டிருந்தது. அதை கண்ட கப்பல் முதலாளி இரண்டு நிமிட வேலைக்கு இவ்வளவு கூலியா ? இதற்கான விளக்கம் தரவும் என பதில் கடிதம் போட்டார்.

அதற்கு அந்த பெரியவர், குழாய் சரி செய்ய இருநூறு ரூபாய், ஆனால் அந்த குறையை கண்டறிய ஒன்பதாயிரத்து எண்ணூறு ரூபாய் என பதில் அனுப்பி அந்த பணத்தை பெற்றார்.

"கடின உழைப்பு முக்கியம் தான் , ஆனால் காரியம் அறிந்து செயல்படுவது அதை விட முக்கியம்"

2 comments:

Unknown said...

without pain no gain

..செந்தில் said...

ya its true. But without meaningful pain then there is no gain.